Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வாகனங்கள்

Print PDF

தினபூமி        13.11.2013

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வாகனங்கள்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Mini-Gave-Car-keys(C).jpg 

சென்னை, நவ.13 - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பயன்பாட்டிற்காக  நவீன வசதிகளுடன் கூடிய 60 புதிய நாய் பயண வாகனங்கள்  வழங்கும்  நிகழ்ச்சி.

தமிழக முதலமைச்சர் 6.10.2012 அன்று தெரு நாய்களுக்கு கருத்தடை செய்தல்  மற்றும் வெறி நாய் கடி தடுப்பு திட்டம்  செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டு, ஆய்வின் அடிப்படையில்,  இத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் முனைப்புடன் சிறப்பாக செயல்படுத்திட பல்வேறு  அறிவுரைகளை வழங்கினார்.  

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க,  9 மாநகராட்சிகள் (சென்னை தவிர) மற்றும் 126 நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும்  தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து பராமரிப்பதற்காக  80 எண்ணிக்கையிலான நாய்கள் காப்பகங்கள் கட்டவும்,   நாய்கள் பயண வாகனங்கள் 60 வாங்கிடவும் அரசு ரூ.5.40 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க, நேற்று (12.11.2013) 60 எண்ணிக்கையிலான புதிய நாய்கள் பயண வாகனங்களை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு  நகராட்சி நிர்வாகம்,  ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி வழங்கப்பட்டன.   இந்த வாகனத்தின் சராச்சரி மதிப்பு ரூ.6.50 இலட்சம் ஆகும்.

இந்த நவீன நாய் வாகனங்கள் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டவையாகும்.  மனித நேயத்துடன் நாய்களை பிடித்து, அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்ல வசதியாக நவீன முறையில் நாய்கள் பயண வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில்,  ஒவ்வொரு நாயும் தனித்தனியாக அமருவதற்கு வசதியாக போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கொண்ட 6 தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், நாய்களை  பிடிக்கும் பணியாளர்களுக்காக தனியாக இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  இந்த வாகனங்களை பயன்படுத்துவதால் மனித நேயத்துடனும், விரைவாகவும், கூடுதலாகவும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்து பராமரிக்க இயலும்.

இவ்வாறு அவர் செய்திக்குறிப்பு கூறுகிறது.

 

நங்கநல்லுார் 5வது பிரதான சாலை : பழவந்தாங்கல் சுரங்கப்பாதை இணைப்பு

Print PDF

தினமலர்           07.11.2013

நங்கநல்லுார் 5வது பிரதான சாலை : பழவந்தாங்கல் சுரங்கப்பாதை இணைப்பு


ஆலந்துார் : பழவந்தாங்கல் சுரங்கப்பாதை-நங்கநல்லுார் ஐந்தாவது பிரதான சாலை இரண்டையும் இணைக்கும் வகையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.

நங்கநல்லுார், மூவரசம்பட்டு, மடிப்பாக்கம் பகுதிவாசிகள், ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்ல, நங்கநல்லுார் ஐந்தாவது பிரதான சாலை, பழவந்தாங்கல் ரயில்வே சுரங்கப்பாதை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 50 அடிக்கும் மேல் அகலம் கொண்ட இந்த சாலை இருவழியாக பயன்படுத்தப் பட்டது.குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், கடந்த 50 ஆண்டுகளில் இந்த சாலையில் போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்துவிட்டது.இந்த நிலையில், பழவந்தாங்கல் சுரங்கப்பாதைக்கும், நங்கநல்லூர் ஐந்தாவது பிரதான சாலைக்கும் இடையே, 150 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட 'ப' வடிவில் குறுகலான சாலை ஒன்று உள்ளது.போக்குவரத்து நெரிசலால், அந்த சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்ட பின்னும், நெரிசல் தொடர்ந்தது.

அதையடுத்து, ஆலந்துார் நகராட்சியாக இருந்தபோது, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மற்றும் 5வது பிரதான சாலையை, 'ப' சாலையை விட்டு விட்டு, நேரடியாக இணைக்க, நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. கடந்த, 2005ல், நிலம் கையகப்படுத்த, வருவாய் துறைக்கு அனுமதி அளிக்கப் பட்டது. எனினும், பல்வேறு குறுக்கீடுகளால், கையகப்படுத்தல் நடக்கவில்லை.

இதையடுத்து தற்போது, சாலையை இணைக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி இறங்கி உள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாலை இணைக்கப்பட வேண்டிய இடத்தில், வருவாய் துறை மூலம், கடந்த வாரம் நிலம் அளக்கப்பட்டது. 15 ஆயிரம் சதுர அடி பரப்பில் நிலம் தேவைப்படுகிறது. அந்த இடத்தில் தற்போது குடியிருப்புகள் உள்ளன. அவர்களுக்கு, மாநகராட்சி நிலம் மற்றும் உடைமைத் துறை மூலம், இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யப்படும்.இந்த சாலை இணைக்கப் படும் பட்சத்தில், 50 அடி அகல சாலையாக மாறி, இருவழியாக பயன்படுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறையும்,இவ்வாறு அவர் கூறினார்.

 

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ரூ.1 கோடியே 3 லட்சம் செலவில் சுகாதார வளாக பணிகள் ஜரூர்

Print PDF

தினகரன்         04.11.2013

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ரூ.1 கோடியே 3 லட்சம் செலவில் சுகாதார வளாக பணிகள் ஜரூர்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் 35 சுகாதார வளாகங்கள் மராமத்து பணிகள் ரூ.1 கோடியே 3 லட்சத்து 15 ஆயிரம் செல வில் நடைபெற்று வருகிறது.

இதன்படி 3வது வார்டு டிரைனேஜ் தெருவில்  நவீன கழிப்பிடம் ரூ. 9 லட்சத்தில் கட்டவும், இதுபோல தேவி தெரு பஸ் ஸ்டாப் அருகிலும், 1வது வார்டு தெப்பக் குளத் தெருவில் உள்ள நவீன கழிப்பிடமும் ரூ.4.5 லட்சத்திலும் மரா மத்து பணிகள் நடை பெற்று வருகிறது. 4 வது வார்டு மற்றும் 5வது வார் டில் உள்ள கன்னிமார் தோப்பு, கீதா புரம் கல்மேட் டுத் தெரு, திருவானைக்காவல் தெப் பக்குளம் மற் றும் தாகூர் தெருக்களில் உள்ள 6 கழிப்பிடங்களில் ரூ.6 லட்சம் மதிப்பிலும் பராமரிப்பு  பணிகள் நடக்கிறது.

8வது வார்டு சிந்தாமணி பதுவை நகர் சுகாதார வளாகம் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. வார்டு எண் 19 வெல்லமண்டி ரோடு மற்றும் 21 வது வார்டு வரகனேரி பெரியார் நகர் நவீனக் கழிப்பிடம் ரூ.2 லட்சத்திலும், 22 வது வார்டு மல்லிகைபுரம் பிரதானசாலையில் ஆண் கள், பெண்கள் நவீன கழிப்பிடம், மற்றும் 23 வது வார்டு செங்குளம் காலனி நவீன கழிப்பிடம் ரூ. 9 லட்சத்தில் மராமத்து பணிக ளும், 39 வது வார்டு எடமலைப்பட்டிப்புதூர் நவீன கழிப்பிடம் ரூ.2 லட்சத்தி லும், 40 வது வார்டு ராஜம்நகர் நவீன கழிப்பி டம் ரூ.5 லட்சம் மதிப்பிலும், எம்ஜி ஆர் நகர் நவீன பொதுக் கழிப்பிடம் ரூ.3 லட்சம் மதிப்பிலும், 45வது வார்டு சின்ன மிளகு பாறை பகுதி  ஒருங்கிணைந்த சுகா தார வளாகம் ரூ.5 லட்சத் தில் மராமத்து பணிகளும், 51வது வார்டு சங்கீதபுரத் தில் உள்ள நவீன கழிப்பிடத்தில் ரூ 4.9 லட்சத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

52வது வார்டு மேல வண்ணாரப்பேட்டை மற் றும் கல்லாங்காடு பகுதி நவீன கழிப்பிடங்களில் ரூ.4.லட்சம் செலவில் மரா மத்து பணிகள் நடக்கி றது.மேலும் 2.5 லட்சம் மதிப்பில் 52வது வார்டு மீன்காரத்தெரு நவீன கழிப் பிட மராமத்து பணிகளும், 54 வது வார்டில் ரூ.2.5 லட் சம் மதிப்பீட்டில் ரூ 2.5 லட்சத்தில் மராமத்து பணி கள் செய்யப்படுகிறது. 49 வது வார்டில் அன்னை சத்யா நகர் நவீன கழிப்பிடத்தில் ரூ.3 லட்சம் மதிப் பீட்டில் சீரமைக்கும் பணி நடக்கிறது. 50வது வார்டு வாமடம் ஆண்கள் நவீன பொதுக்கழிப்பிடம் மற்றும் பொது சுகாதார வளாகத் தில் ரூ.7 லட்சம் செலவில் மராமத்து பணிகள் நடக்கி றது. 55வது வார்டு செட்டிப்பேட்டை ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் காந்திரபுரம்  ஒருங்கிணைந்த சுகாதார வளா கம் ஆகியவற்றில் ரூ. 6 லட்சத்தில் மராமத்து பணி கள் நடைபெற்று வருகிறது.

56 வது வார்டு தில்லைநகர் ஒருங்கிணைந்த சுகா தார வளாகத்தில் ரூ.5லட்சத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. 57வது வார்டு சோழராஜபுரம் ஒருங்கிணைந்த சுகா தார வளாகத்தில் ரூ.5 லட் சம் செலவில் மராமத்து பணிகள் நடக்கிறது. 58வது வார்டில் டாக்கர் ரோடு மற்றும் காளையன் தெரு வில் உள்ள நவீன கழிப்பிடம் ரூ.3 லட்சத்திலும், 59 வது வார்டு பங்காளி தெரு நவீன கழிப்பிடத்தில் ரூ.5 லட்சம் செலவில் மராமத்து பணிகளும் நடந்து வருகி றது. 60 வது வார்டில்  கீழ கல்நாயக்கன் தெரு நவீன கழிப்பிடத்தில் ரூ. 3.5 லட் சம் செலவிலும், பாண்டமங்கலம் கிழக்கு பகுதியில் உள்ள நவீன கழிப்பிடத்தில் ரூ. 2.5 லட்சத்திலும் மரா மத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இது போல திருச்சி மாநகராட்சி பகுதி யில் உள்ள 35 சுகாதார வளாகங்கள் மற் றும் நவீன கழிப்பிடங்களில் ரூ. 1 கோடியே 3 லட் சத்து 15 ஆயிரம் செலவில் மரா மத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 


Page 37 of 238