Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மதுரை துணைக்கோள் நகரத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினபூமி           21.10.2013

மதுரை துணைக்கோள் நகரத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/New-CM_Jaya3(C)_1.jpg 

சென்னை, அக். 21 - மதுரை விமான நிலையத்திற்கு அருகில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும். அதற்காக 120 கோடி ருபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதன்படி 19,500 மனைகள் துணைக்கோள் நகரத்தில் உருவாக்கப்படும்  என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறைவிடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குறிப்பாக, நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வீட்டுவசதித் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும் திட்டங்களில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக முன் கட்டுமான தொழில்நுட்பத்தை அதாவது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, கட்டட பாகங்களான தூண், உத்திரம், மாடிப்படி, கூரை ஆகியவைகள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு, உபயோகத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் தண்ணீர் மூலம் ஊரசiபே செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்படும். கட்டுமான பாகங்கள் தயாரிக்கப்பட்ட பின் அவைகள் கட்டுமான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு அதற்குரிய இடங்களில் இயந்திரங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டு, கலக்கப்பட்ட திண்காரை கலவை மூலம் இணைக்கப்படும். 24 மாடிகள் கொண்ட உயர் அடுக்குமாடிக் கட்டடங்களை இத்தொழில்நுட்பத்தின் மூலம் 24 மாதங்களில் கட்டி முடிக்க இயலும்.

முன் கட்டுமான தொழில்நுட்பம் என்ற இந்த நவீன தொழில்நுட்பம் முதற்கட்டமாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சோழிங்கநல்லூரில் கட்டப்பட உள்ள 

1,500 பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் பயன்படுத்தவும், இத்திட்டத்தினை செயல்படுத்த 379 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

சென்னை நகரத்தில் வசிக்கும் மக்களின் வீட்டு வசதி தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் வீட்டு வசதி தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வீட்டு வசதித் திட்டங்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  தலைமையிலான அரசால் மாநிலத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் தற்பொழுது பெருகி வரும் வீட்டு வசதித் தேவையினைக் கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையத்திற்கு அருகில் மதுரை-திருநெல்வேலி நான்கு வழிப்பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒரு ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரத்தை உருவாக்க  தமிழ்நாடு முதலமைச்சர் 

ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். 

இந்த துணைக்கோள் நகரத்தில் குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் உருவாக்கப்படும். 

முதற்கட்டமாக, இந்த துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர் வசதி, கழிவுநீர், வடிகால் வசதி, மழைநீர் கால்வாய், சிறுபாலங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளுக்காக 120 கோடி ருபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு "டேப்லெட்' சைகை மொழியில் பாடத்திட்டம்

Print PDF

தினமலர்           21.10.2013

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு "டேப்லெட்' சைகை மொழியில் பாடத்திட்டம்

கோவை :கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் (ஏ.ஐ.எப்.,) சார்பில், கம்ப்யூட்டர் கல்வித்திட்டம், டிஜிட்டல் ஸ்டோரி டெல்லிங், இங்கிலீஷ் ஹெல்பர், சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு "டேப்லெட்' கல்வி முறை வழங்கப்படுகிறது.

ஏ.ஐ.எப்., இந்தியாவுக்கான இயக்குனர் ஹேமந்த்பால், ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், "இங்கிலீஷ் ஹெல்பர்' வகுப்பு நடப்பதை ஆய்வு செய்தார். மாணவர்களின் ஆங்கில அறிவுத்திறன் குறித்து விசாரித்தார். "வகுப்பிலும், வீட்டிலும் ஆங்கில மொழியில் பேச மாணவர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். சக மாணவர்களுக்குள் ஆங்கில மொழியில் பேச வேண்டும். ஆங்கில மொழி வகுப்பை, முழுமையாக ஆங்கிலத்தில் தொடர வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் "ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க வேண்டும்' என்றார்.

ரத்தினபுரி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தபோது, டிஜிட்டல் இக்குலைசர் புரோகிராமில், பாடம் நடத்துவது, திட்டங்களை உருவாக்குவது குறித்து மாணவர்களிடம் விசாரித்தார். "கம்ப்யூட்டர் தொழில்நுட்ப முறையுடன் இணைந்து மாணவர்கள் பாடம் கற்கும் முறையை ஊக்குவிக்க வேண்டும்' என்றார்.

ஹேமந்த்பால் கூறுகையில், ""ஆர்.எஸ்.புரம் காது கேளாத, வாய் பேச முடியாத சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 24 டேப்லெட், ஆசிரியர்களுக்கு ஆறு டேப்லெட் வழங்கப்பட உள்ளது. இதனால், மாணவர்கள் முன்கூட்டியே பாடத்தை கற்றுக்கொள்ளலாம். சைகை மொழியில் ஆசிரியர் பாடம் நடத்துவது வீடியோ எடுக்கப்பட்டு, டேப்லெட்களில் பதிவு செய்யப்படும்.

இதன் மூலம், சிறப்பு பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும். சிறப்பு பள்ளிக்கு ஏ.ஐ.எப்., சார்பில் பயிற்றுனர் ஒருவர் நியமிக்கப்படுவார். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், ஆங்கிலம் மொழிக்கல்வி அறிவை மேம்படுத்திக்கொள்ளவும் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.

 

கோவை மாநகராட்சியில் 19 கவுன்சிலர்களுக்கான அலுவலகங்கள் திறப்பு

Print PDF

தினத்தந்தி            21.10.2013

கோவை மாநகராட்சியில் 19 கவுன்சிலர்களுக்கான அலுவலகங்கள் திறப்பு

கோவை மாநகராட்சியில் 19 வார்டுகளில் கவுன்சிலர்களுக்கான அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

கவுன்சிலர் அலுவலகங்கள்

கோவை மாநகராட்சியில் உள்ள வார்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று மேயர் செ.ம.வேலுச்சாமி அறிவித்திருந்தார்.அதன்படி கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் முதல்கட்டமாக 19 வார்டு கவுன்சிலர்களுக்கான அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டன.

அலுவலகங்கள் திறப்பு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 97-வது வார்டு சுந்தராபுரம் தக்காளி மா£க்¢கெட் அருகிலும், 98-வது வார்டு போத்தனூர் ரயில்வேகேட் அருகில் உள்ள அம்மா உணவக வளாகத்திலும் 2 கவன்சிலர்களுக்கான வார்டு அலுவலகங்களை மேயர் செ.ம.வேலுசாமி முன்னிலையில் அமைச்சர் செ.தாமோதரன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

இதேபோல் கிழக்கு மண்டலம் 37-வது வார்டு குருசாமி நகரிலும், 56-வது வார்டு சந்திரகாந்தி நகர் பகுதியிலும், தெற்கு மண்டலம் 92-வது வார்டு பாலக்காடு ரோடு குனியமுத்தூர்,78-வது வார்டு செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியிலும் மற்றும் மேற்கு மண்டலம், மத்தியமண்டலம் ஆகிய பகுதிகளிலும் கவுன்சிலர்களுக்கான அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் ஆர் சின்னசாமி, எஸ்.பி.வேலுமணி, தா.மலரவன், ஆர்.சேலஞ்சர் துரை, மாநகராட்சி ஆணையாளர் க.லதா, துணை மேயர் லீலாவதி உண்ணி, துணை ஆணையாளர் சு.சிவராசு, மண்டலத்தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம், பி.சாவித்திரி, கே.ஏ ஆதிநாராணயன், குழுத்தலைவர்கள் அம்மன் அர்ச்சுனன், பிரபாகரன் சாந்தாமணி, நியமன குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர பொறியாளர் சுகுமார், கண்காணி¢ப்பு பொறியாளர் கணேஷ்வரன், செயற்பொறியாளர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 40 of 238