Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கழிவுநீரில் மிதந்த வீடுகளுக்கு ரூ.1.5 கோடியில் வடிகால் பணி

Print PDF

தினமலர்             03.10.2013

கழிவுநீரில் மிதந்த வீடுகளுக்கு ரூ.1.5 கோடியில் வடிகால் பணி

திருச்சி: காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, காட்டூர் அண்ணா நகர் வீடுகளைச் சுற்றி தேங்கி நின்ற கழிவுநீரை வெளியேற்ற திருச்சி மாநகராட்சி கமிஷனர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.திருச்சி மாநகராட்சி 61வது வார்டில் உள்ளது காட்டூர் அண்ணா நகர் பகுதியாகும். இங்கு 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் கழிவுநீர் சாலைகளிலும், வீடுகளையும் சுற்றி தேங்கி நின்றது.

இதனால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல முடியாமலும், சுகாதார முறையில் வாழ முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 35 பேர் கவுன்சிலர் குமார் தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெயாவை நேரில் சந்தித்து, கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அண்ணா நகர் பகுதி மக்களின் அவலத்தை காலைக்கதிர் ஃபோட்டோவுடன் சுட்டிகாட்டியிருந்தது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் காலை மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, செயற்பொறியாளர் அருணாச்சலம், அரியமங்கலம் உதவி கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் அண்ணா நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வில், "மழைநீர் வடிகாலில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவர்களுக்கு உரிய மாற்று இடம் வழங்க' கமிஷனர் உத்தரவிட்டார்.

அப்பகுதியில், "1.5 கோடி ரூபாய் செலவில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க' அதிகாரிகளுக்கு கமிஷனர் தண்டபாணி உத்தரவிட்டார். அதோடு. நேற்றுமுன்தினம் பிற்பகல் முதலே, கழிவுநீரை வெளியேற்றுவதற்கான பணியில் மாநகராட்சி பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

கோடம்பாக்கம் மேம்பாலத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமணி           03.10.2013

கோடம்பாக்கம் மேம்பாலத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

சென்னையில் மிகப் பழமையான கோடம்பாக்கம் மேம்பாலம் மற்றும் கோட்டூர்புரம் பாலம் ஆகியவற்றை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிகவும் பழைமையான மேம்பாலங்களில் கோடம்பாக்கம் மேம்பாலமும் ஒன்று. ரயில்வே மேம்பாலமாக கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், இன்று மிகப்பெரிய

அளவில் போக்குவரத்து நெரிசல் மிக்கதாக உள்ளது. இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு, கடந்த 1950-ம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்தினரால் முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பாலத்தை கட்டும் பணியை மெட்ராஸ் மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டது. கட்டுமானப் பணிகள் கடந்த 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பணிகள் அனைத்தும் 1965-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. மிகவும் பழைமையான இந்த மேம்பாலத்தை அடிக்கடி பழுதுபார்க்கும் பணிகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில், அதை மேம்படுத்துவதற்கான நிதியை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சியில் அண்மையில் நடந்த மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

கோடம்பாக்கம் மேம்பாலம், கோட்டூர்புரம் பாலம் ஆகியவற்றை மேம்படுத்த சுமார் ரூ. 5.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கமலம்மாள் நகர், பெரிய குப்பம், கத்திவாக்கம் நெடுஞ்சாலை (வார்டு 2ம்) உமர்பகதூர் தெரு, உசேன் நகர் (வார்டு 115) ஆகிய பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்களும், சின்ன குப்பம் (வார்டு 2) பகுதியில் உள்ள 2 பொதுக் கழிப்பிடங்களும் உபயோகமின்றி பழுதடைந்துள்ளதால் இடிக்கப்படும் 22-ம் வார்டில் புழல் காந்தி பிரதான சாலையில் நகர ஆரம்ப சுகாதார மையம், வார்டு 91 மேற்கு முகப்பேர் 3-வது பிரதான சாலையில் சமுதாய நலக்கூடம், கோடம்பாக்கம் வார்டு 112-ல் வெள்ளாள தெருவில் சமுதாய நலக்கூடம் ஆகியவை கட்டப்படும்.

வார்டு 32 மாதவரம் கங்கையம்மன் நகரில் நகர்புற ஆரம்ப சுகாதார மையம், ஆலந்தூர் செüரி தெருவில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் ஆகியவை கட்டப்படும்.

ரூ. 2,000-த்துக்கு மேல் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடங்கள் மற்றும் ஐயன் திருவள்ளுவர் கலையரங்கம் ஆகியவற்றுக்கு ஒரு நாள் முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் முன்வைப்புத் தொகை ரூ. 1,000-த்தில் இருந்து ரூ. 1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ரு.1½ கோடி மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்படும் மாநகராட்சி ஆணையர் தண்டபாணி உத்தரவு

Print PDF

தினத்தந்தி           03.10.2013

ரு.1½ கோடி மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்படும் மாநகராட்சி ஆணையர் தண்டபாணி உத்தரவு

திருச்சியில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தண்டபாணி உத்தரவிட்டார்.

ரூ.1½ கோடியில் வடிகால்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் அண்ணாநகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு சிலரால் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் உள்ள இடத்தில் மழைநீர் சரிவர செல்லாமல் தேங்கி உள்ளது.

இதனை மாநகராட்சி ஆணையர் தண்டபாணி நேரில் ஆய்வு செய்து அந்த இடத்தில் உள்ள மக்களுக்கு போதுமான பாதுகாப்பான மாற்று இடம் வழங்கவும், மேலும் நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இறைச்சி கடை ஆய்வு

மேலும், அரியமங்கலம் கோட்டத்தில் காந்தி சந்தை அருகில் ரூ.1 கோடி மதிப்பில் நவீன ஆட்டு இறைச்சி கூடம் கட்டப்பட்டு உள்ள இடத்தை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது செயற்பொறியாளர் அருணாசலம், உதவிஆணையர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், குமரேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 44 of 238