Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நெல்லை மாநகராட்சி புதிய கட்டட பணி முடங்கியது ஏன்? அமைச்சர் முனுசாமி இன்று நேரில் ஆய்வு

Print PDF
தினகரன்            04.08.2012

நெல்லை மாநகராட்சி புதிய கட்டட பணி முடங்கியது ஏன்? அமைச்சர் முனுசாமி இன்று நேரில் ஆய்வு

நெல்லை: நெல்லை மாநகராட்சியின் புதிய கட்டிட பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முடங்கி கிடப்பது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் இன்று விசாரணை மேற்கொள்கிறார்.
 
நெல்லை மாநகராட்சிக்கு ஒருங்கிணைந்த புதிய மைய அலுவலக கட்டடம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்ட, கடந்த 2010 மே மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் அனுமதியின் பேரில் மெசர்ஸ் காஸ்யப் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட் என்னும் பெங்களூர் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2011ம் ஆண்டு பிப்.5ல் கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.

இதன்படி மாநகராட்சி வளாகத்தில் உள்ள பழைய பழுதடைந்த பிரதான கட்டிடத்தை இடித்து விட்டு அங்கு தரை தளம், முதல் தளம், 2வது தளம் ஆகியவற்றுடன் மொத்தம் 42 ஆயிரத்து 646 சதுர அடி பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து நூற்றாண்டு பெருமை மிக்க வஉசி கட்டிடம் இடிக்கப்பட்டதோடு, அதில் புதிய கட்டிடம் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணிகளும் நடந்தன.
 
ஆனால் அதற்குள்ளாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இப்பணிகளை கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனமும் சப்-கான்ட்ராக்ட் என்ற முறையில் பணிகளை நடத்த முன்வந்தது. இருப்பினும் மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் சேர வேண்டிய தொகை சரியாக போய் சேராததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இப்பணிகள் 15 மாதத்திற்குள் முடிவடையும் என அடிக்கல் நாட்டு விழாவில் அறிவிக்கப்பட்டது. தற்போது ஒன்றரை ஆண்டுகளாகியும் கட்டுமான பணிகளில் துளியளவு கூட முன்னேற்றம் இல்லை. இதனால் மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். வானம்  தோண்டிய குழிகளில் பெயரளவுக்கு கூட பணிகள் நடக்காததால், இதுகுறித்து அரசுக்கும் பல்வேறு புகார்கள் சென்றுள்ளன.

இந்நிலையில் நெல்லைக்கு வரும் உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் பணிகள் குறித்து இன்று காலையில் ஆய்வு மேற்கொள்கிறார். அதில் நெல்லை மாநகராட்சியில் புதிய கட்டிட பணிகள் 18 மாதங்களாக முடங்கி கிடப்பதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கவுள்ளார். தொடர்ந்து பகல் 2 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வு கூட்டத்திலும் இதுகுறித்து விசாரணை நடக்கலாம் என கூறப்படுகிறது.

புதிய கட்டிடத்திற்கான தோற்ற பலகைகள் மாநகராட்சியில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த பிரமாண்ட கட்டிடத்தை காணும் ஆவல் பொதுமக்களுக்கும் உள்ளது. விரைவில் மழைக்காலம் வரவுள்ள நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பித்து கட்டிட பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

பாதிப்புகள் என்ன?

நெல்லை மாநகராட்சியில் புதிய கட்டிட பணிகள் முடங்கி கிடப்பதால் சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவு, கணக்கு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளும், சில முக்கிய அதிகாரிகளின் அறைகளும் தற்போது இட நெருக்கடியில் இயங்கி வருகின்றன. மாநகராட்சி வரிமேல் முறையீட்டு ஆணையம் இயங்கவும் போதிய இடவசதிகள் இல்லை. முன்பு விஸ்தாரமான இடத்தில் இயங்கி வந்த நெல்லை மண்டல அலுவலகம் தற்போது புறாக்கூண்டிற்குள் சிக்கியது போல் விழிபிதுங்கி நிற்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் பலர் உணவருந்த இட வசதியின்றி அருகிலுள்ள பூங்கா பெஞ்சுகளில் மதிய வேளைகளில் சாப்பிடுகின்றனர். புதிய கட்டிடம் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு தீர்வாக முடியும்.
 

புதிய உயர்கோபுர மின்விளக்குகள் துவக்க விழா

Print PDF

தினமணி                   03.08.2012

புதிய உயர்கோபுர மின்விளக்குகள் துவக்க விழா

ராமநாதபுரம்,ஆக. 2: ராமநாதபுரம் அரண்மனை மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய இரு இடங்களிலும் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் இயக்கி துவக்கி வைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் அரண்மனை முன்பாக அமைக்கப்பட்டிருந்த விழாவிற்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி.சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.கவிதா, வர்த்தகர்கள் சங்கத் தலைவர் பா.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் ப.மு.நெ.முஜிபுர்ரகுமான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ராமநாதபுரம் அரண்மனை முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கினை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் இயக்கி வைத்து பேசியதாவது:

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தெரு விளக்குகளை பராமரிக்கதமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான அரண்மனையிலும், புதிய பஸ் நிலையம் அருகிலும் தலா ரூ. 5.8 லட்சம் மதிப்பில் இரு உயர்கோபுர மின்விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டு இயக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள் கே.சி.வரதன், வீரபாண்டியன், தவ.முனியசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அங்குச்சாமி ஆகியோர் உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழா நிறைவுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சரும், சிறுபான்மைக் கல்வி ஆணைய உறுப்பினருமான அ.அன்வர்ராஜா புதிய பஸ் நிலையத்தில் மற்றொரு உயர்கோபுர மின்விளக்கினை இயக்கித் துவக்கி வைத்தார். நகராட்சிப் பொறியாளர் மதிவாணன் நன்றி கூறினார்.

 

சேத்தூரில் சுகாதார வளாகம் திறப்பு

Print PDF
தினமணி                    31.07.2012

சேத்தூரில் சுகாதார வளாகம் திறப்பு


ராஜபாளையம், ஜூலை 30: சேத்தூர் பேரூராட்சியில் 11, 12-வது வார்டு பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.

 சேத்தூர் பேரூராட்சித் தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர்  சுப்பிரமணியம், நிர்வாக அதிகாரி முருகன், பொறியாளர் கலைஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 சுகாதார வளாகக் கட்டடத்தை ராஜபாளையம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.கோபால்சாமி திறந்து வைத்துப் பேசினார். சேத்தூர் அ.தி.மு.க. செயலாளர் செல்வக்குமார், பேரூராட்சிக் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 84 of 238