Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பாதாளச் சாக்கடைக்குள் திடப்பொருட்கள் கலக்கக் கூடாது

Print PDF

தினமணி           07.12.2010

பாதாளச் சாக்கடைக்குள் திடப்பொருட்கள் கலக்கக் கூடாது

திருப்பூர், டிச. 6: அடைப்பை ஏற்படுத்தும் வகையிலான திடப்பொருட்களை பாதாளச் சாக்கடைக்குள் கலப்பதைத் தடுக்க மக்கள் கழிவுநீர்க் குழாயில் சேம்பர்கள் அமைக்க வேண்டும் என்று, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி விடுத்துள்ள அறிக்கை:

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பாதாளச் சாக்கடை, மலக்கழிவுத் தொட்டி உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணிக்கு தொழிலாளர்களைப் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது. பாதாளச் சாக்கடை, மலக்கழிவுத் தொட்டி உள்ளிட்டவற்றிலிருந்து அபாயகரமான நச்சு வாயு வெளியேறும் என்பதால், மக்கள் அப்பணிக்கு ஜெட்ராடிங் இயந்திரம், டி சில்டிங் இயந்திரம், மொபைல் மெக்கானிக்கல் பம்ப்ஸ் உள்ளிட்ட இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.

தவிர, பாதாளச் சாக்கடையில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்ள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், மாட்டுத் தொழுவங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து திடப்பொருட்களை பாதாள சாக்கடைக்குள் போடக் கூடாது.

கழிவுநீர்க் குழாய்களில் தடுப்புகள் அமைத்து திடப்பொருட்களை பாதாள சாக்கடைக்குள் கலக்க விடாமல் தடுக்க வேண்டும். தவிர, வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால்களுடன் இணைக்கக் கூடாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஓட்டல் கழிவுகளை நேரடியாக பாதாள சாக்கடையில் இணைக்க தடை

Print PDF

தினகரன்             06.12.2010

ஓட்டல் கழிவுகளை நேரடியாக பாதாள சாக்கடையில் இணைக்க தடை

நெல்லை, டிச.6: ஓட்டல்கள், லாட்ஜ்கள் தங்கள் சாக்கடை கழிவுகளை பாதாள சாக்கடையில் நேரடியாக இணைக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பாதாள சாக்கடை, தனியார் நிறுவனங்களில் உள்ள செப்டிக் டேங்குகளில் ஆட்களை வைத்து அடைப்புகளை நீக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் தங்கள் கட்டிட சாக்கடை இணைப்புகளை நேரடியாக பாதாள சாக்கடை மெயின் இணைப்பில் கொடுக்க கூடாது.

இந்த உரிமையாளர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில் டையாபிரம்சேம்பர்என்னும் பிரத்யேக தொட்டி அமைக்க வேண்டும். அதன் மூலம் பாதாள சாக்கடை மெயின் குழாயில் இணைப்பு கொடுக்க வேண்டும்.

15 தினங்களுக்குள் இதனை நிறைவேற்ற தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும். பாதாள சாக்கடைக்கு இணைப்பு பெறாதவர்கள் இன்னும் 7 தினங்களுக்குள் கண்டிப்பாக விண்ணப்பித்து இணைப்பு பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏர்வாடி பேருராட்சியில் குடிநீர் தொட்டி, சாலை அமைக்க அரசு ரூ.79 லட்சம் ஒதுக்கீடு பணிகளை தரமாக நிறைவேற்ற வேண்டுகோள்

Print PDF

தினகரன்             06.12.2010

ஏர்வாடி பேருராட்சியில் குடிநீர் தொட்டி, சாலை அமைக்க அரசு ரூ.79 லட்சம் ஒதுக்கீடு பணிகளை தரமாக நிறைவேற்ற வேண்டுகோள்

ஏர்வாடி, டிச. 6: ஏர்வாடி பேருராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நபார்டு நிதி உதவி திட்டம் மூலம் (2009&10ல்) 51.50 லட்சமும், மேற்கு தொடர்ச்சி மலை அபிவி ருத்தி திட்டம் மூலம் 13 லட்சமும் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் பேரூ ராட்சி பகுதியில் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் போடப்பட் டன.

இந்நிலையில் தற்போது ஏர்வாடி பேரூராட்சிக்கு சிறப்பு சாலை பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 59 லட்சம், இயக்கம் மற்றும் பராமரிப்பு குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இந்த நிதியின் மூலம் 2 லட்சம் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், 9வது தெருவி லிருந்து 6ம் தெருவிற்கும், ஈத்கா தெரு பஸ் திரும்பும் இடத்திலிருந்து திருவங்க னேரி வரையிலும் மற்றும் பல தெருக்களுக்கு தார் சாலைகள் அமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘நபார்டு நிதி உதவி திட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அபி விருத்தி திட்டத்தின் மூல மாக போடப்பட்ட தார் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே பழுதடைந்து விட்டன. எனவே தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் தரமான சாலைகள் அமைக்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத் தனர்.

இதுபற்றி பஞ்சாயத்து நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, ‘சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு குறைந்தது ஒரு வார காலத்திற்கு தண் ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். இந்த கால கட் டத்தில் சாலையில் வாக னங்கள் எதுவும் செல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பொதுமக்களில் சிலர் சாலைப் பணி நடந்து கொண்டிருக்கும் போதே இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதன் காரணமாகவே சாலைகள் விரைவில் பழுதடைய நேரிட்டதுஎன்றனர்.

Last Updated on Monday, 06 December 2010 06:07
 


Page 95 of 238