Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நகராட்சி புதிய மருத்துவமனை ஜனவரி மாதம் திறக்கப்படும் நகர்மன்ற தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                10.09.2010

நகராட்சி புதிய மருத்துவமனை ஜனவரி மாதம் திறக்கப்படும் நகர்மன்ற தலைவர் தகவல்

திண்டுக்கல், நவ. 10: திண்டுக்கல் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் நடராஜன் கூறினார்.

திண்டுக்கல் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். நகரமைப்பு அலுவலர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். நகர்நல அலுவலர் வரதராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குடிநீர், கழிவுநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட நகர்மன்றத்தலைவர் நடராஜன் கூறியதாவது:

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கம், ஸ்கேன் சென்டர் மற்றும் அதிநவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்டு வரும் கமலாநேரு மகப்பேறு மருத்துவமனை கட்டிடப்பணி முடியும்தருவாயில் உள்ளது. இப்பணி முடிந்ததும் ஜனவரி முதல் வாரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இதை திறந்து வைக்கிறார். கலெக்டரின் உத்தரவின்பேரில் நகரில் சுற்றிதிரியும் பன்றிகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

தேனியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிக்கு பூமி பூஜை

Print PDF

தினமணி              09.11.2010

தேனியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிக்கு பூமி பூஜை

தேனி, நவ. 8: தேனி அல்லிநகரம் நகராட்சியில் ரூ. 38.66 கோடி மதிப்பீட்டிலான பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பூ. முத்துவீரன் தலைமையில் திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

தேனியில் பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக 2007-ம் ஆண்டு ரூ. 35.27 கோடியில் திட்டம் மதிப்பீடு செய்து, அரசிடம் அனுமதி பெற்றப்பட்டது. பாதாளச் சாக்கடை திட்டத்துக்கான கழிவு நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதால், இந்த ஆண்டு திட்டம் மறு மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ. 38.66 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள அரசிடம் அனுமதி பெறப்பட்டது.

தேனி நகராட்சிக்கு உள்பட்ட 33 வார்டுகளும் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், 56.70 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. 2,332 கழிவு நீர்த் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக கே.ஆர்.ஆர். நகர், கருவேல்நாயக்கன்ப்பட்டி ஆகிய இடங்களில் கழிவு நீரேற்றும் நிலையங்களும், பங்களாமேடு- கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட உள்ளன.

கே.ஆர்.ஆர். நகரில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்கான பூமி பூஜைக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து, பணிகளைத் துவக்கி வைத்தார்.

குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரத்தினவேல், நகர்மன்றத் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் இலங்கேஸ்வரன், ஆணையர் மோனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

தேனி & அல்லிநகரம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் பூமிபூஜையுடன் துவக்கம்

Print PDF

தினகரன்                09.11.2010

தேனி & அல்லிநகரம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் பூமிபூஜையுடன் துவக்கம்

தேனி, நவ.9: தேனி கே.ஆர்.ஆர். நகரில் நடந்த இந்நிக ழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முத்துவீரன் தலைமை வகித் தார். பாதாள சாக்கடைக் கான குழாய் பதிப்பதற்கான குழிகள் தோண்டும் பணி துவங்கியது. நகராட்சித் தலைவர் பழனிச் சாமி, துணைத் தலைவர் இலங்கேசுவரன், தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் ரத்தினவேல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் குழந்தை வேலு பொறியாளர் ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட கலெ க்டர் முத்துவீரன் நிருபர்களி டம் கூறியதாவது: தேனி& அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்நகரில் சாலைகள் மொத்தம் 78 கி.மீ நீளத்தில் உள்ளன. கடந்த 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தேனி&அல்லிநகரம் நகராட்சியில் 85 ஆயிரத்து 724 பேர் உள்ள னர். தேனி& அல்லிநகரில் பாதாள சாக் கடைத் திட்ட த்தை நிறை வேற்ற கடந்த 2007ம் ஆண்டு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக் கல் நாட்டினார்.

அப்போது இதற்கு ரூ35 கோடி மதிப்பிடபட்டது. தற்போது, இத்திட்டப் பணிகள் ரூ38 கோடியே 66 லட் சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தமி ழக அரசு மானியமாக ரூ10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

நகராட்சி மற்றும் பொதுமக்கள பங்குத் தொகையாக ரூ13 கோடியே 29 லட்சம் மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி நிறு வன கடன் மூலம் ரூ11 கோடி யே 46 லட்சம் கடன் பெறு வது என முடிவு செய்யப்பட்டு இத்திட்டம் துவக்கப்படுகிறது. இந்த கடன் வட்டியாக ரூ 52 லட்சம் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. 33 வார்டுகளை 3 பகுதிகளாக பிரித்து இத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 2009 ம் ஆண்டு 96 ஆயிரம் மக்கள்தொகை, வரும் 2024ம் ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம், 2039 ம் ஆண்டு 1 லட்சத்து 51 ஆயிரம் என மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக தேனி& அல்லிநகரில் 2 ஆயிரத்து 332 கழிவுநீர் சேகரிக்கும் ஆள் நுழைவுத் தொட்டிகள் அமைக்கப்படும்.

கே.ஆர்.ஆர். நகர், பங்களாமேடு பகுதிகளில் கழிவுநீரேற்று நிலையங்கள், கருவேல்நாயக்கன்பட்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கப்படவுள்ளன. பாதாள சாக்கடை கட்டும் பணி கள் 2 ஆண்டுகளில் முடிவடை யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.

 


Page 106 of 238