Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சிறுமுகையில் ரூ1.25 கோடியில் மின்மயானம் மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Print PDF

தினகரன்                 01.11.2010

சிறுமுகையில் ரூ1.25 கோடியில் மின்மயானம் மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

மேட்டுப்பாளையம், நவ.1: சிறுமுகை பேரூராட்சியில் அமைய உள்ள ரூ.1.25 கோடி மதிப்பிலான மின்மயான கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவில் மத்திய அமைச்சர் பங்கேற்றார். மேலும் இவ்விழாவில் 725 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சிறுமுகை பேரூராட்சியில் ரூ.1.25 கோடி மதிப்பில் புதிய மின்மயானம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா, ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்மார்கள் பேறு காலத்திற்கு பின் சிகிச்சை பெறுவதற்கான கட்டிட திறப்பு விழா, நெசவாளர் சங்கங்கள் சார்பில் நெசவாளர்களுக்கு ரூ.54 லட்சம் மதிப்பில் கைத்தறி உபகரணங்கள் வழங்கும் விழா, நல திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் சிறுமுகையில் நடந்தது. விழாவிற்கு கோவை கலெக்டர் உமாநாத் தலைமை வகித்தார். சிறுமுகை பேரூராட்சி தலைவர் உதயகுமார் வரவேற்றார். செயல் அலுவலர் கல்யாண சுந்தரம் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். மத்திய அமைச்சர் ராசா பங்கேற்று வெள்ளிகுப்பம் பாளையம் சக்தி விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க புதிய கட்டிடம், ஆலாங்கொம்பில் கூட்டுறவு சங்க சமுதாய கூடம், சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க கல்வெட்டு ஆகியவற்றை திறந்து வைத்து பேசும் போது கூறியதாவது :இப்பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் மின் மயானம் அமைப்பது பாராட்டுக்கு உரியது. நாட்டில் வேறு எந்த அரசும் செய்யாத வளர்ச்சி பணிகளை முதல்வர் கலைஞர் செய்து வருகிறார்.

ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு தொடர கலைஞர் கரத்தை பலப்படுத்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி, மேட்டுப்பாளையம் முன்னாள் எம்.எல்.ஏ அருண்குமார், சிறுமுகை பகுதி கைத்தறி குழும தலைவர் ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆனந்தன், குன்னூர் எம்.எல்.ஏ சவுந்திர பாண்டியன், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் நாச்சிமுத்து, கைத்தறி ஆலோசனை குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், சிவ சண்முகம், தாசில்தார் மணிமேகலை மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டர். முடிவில் கோவை கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குனர் ராஜகோபால் நன்றி கூறினார்.

கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த 7 வயது மணிலா, 8வயது தீனா, 1 வயது கார்த்தி ஆகியோர் மலர் கொத்துக்களை மத்திய அமைச்சர் ராசாவுக்கு வழங்கி நன்றியை தெரிவித்து கொண்டனர்.

 

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ54 லட்சத்தில் பணிகள் உப்பிடமங்கலத்தில் நிறைவேற்றம்

Print PDF

தினகரன்                  29.10.2010

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ54 லட்சத்தில் பணிகள் உப்பிடமங்கலத்தில் நிறைவேற்றம்

கரூர், அக்.29: உப்பிடமங்கலம் பேரூராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ54 லட்சம் மதிப்பில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் (2009&2010) ரூ10 லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாகக் கட்டடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் மனோகரன் வரவேற்றார். கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பேசுகையில், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் 2009&2010ம் ஆண்டில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் மொத்தம் 10 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ54 லட்சத்து 6 ஆயிரம். இத்திட்டத்தின்கீழ் 5வது வார்டு லட்சுமணம்பட்டியில் தார்சாலை ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. உப்பிடமங்கலம் வாரச்சந்தையில் பஸ் நிறுத்தம் அருகில் ரூ13 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம், பேரூராட்சி அலுவலகம் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 7வது வார்டு புகையிலைகுறிச்சியானூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூ2.76 லட்சம் மதிப்பில் சிமென்ட் தளம், 14வது வார்டு லிங்கத்தூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூ2.34 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. உப்பிடமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் ரூ.10லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

13வது வார்டில் உள்ள மயானத்தை ரூ.5லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 10வது வார்டு புதுக்கஞ்சமனூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூ2.10லட்சத்தில் சிமென்ட் தளம் உள்ளிட்ட 10 பணிகள் ரூ54.6 லட்சத்தில் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்றார். விழாவில் தொலை பேசி ஆலாசனைக் குழு உறுப்பினர் நன்னியூர் ராஜேந்திரன், உப்பிடமங்கலம் பேரூராட்சித் தலைவர் ராஜலிங்கம், தாந்தோணி ஊரா ட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரகுநாதன், பேரூரா ட்சி உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் பெரியசாமி நன்றி கூறினார்.

 

ரூ.16,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பை பாதுகாக்க சிறப்பு குழு

Print PDF

தினகரன்                 29.10.2010

ரூ.16,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பை பாதுகாக்க சிறப்பு குழு

புதுடெல்லி, அக். 29: காமன்வெல்த் போட்டியின்போது, ரூ.16,000 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளை பாதுகாப்பதற்காக சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் ஷீலா தீட்சித் நியமித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டியின்போது ரூ.16,000 கோடி செலவில் புதிய மைதானங்கள், சாலைகள், நடைபாதைகள், மேம்பாலங்கள், புல்வெளிகள், ஏற்கனவே இருக்கும் மைதானங்கள் புதுப்பிப்பு, தெரு விளக்குகள் என்று பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. புதிதாக மேம்படுத்தப்பட்ட இந்த உள்கட்டமைப்புகளை பாதுகாப்பது தொடர்பாக முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநகராட்சி, நகராட்சி கவுன்சில், பொதுப்பணித்துறை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதி கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

ரூ.16,000 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு உள்கட்டமைப்புகளை பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும். மாநில அரசின் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தலைமையில் இக்குழு செயல்படும்.

காமன்வெல்த் போட்டியின்போது, புதிய உள்கட்டமைப்புகளை பாதுகாக்க எந்த அளவுக்கு கவனம் செலுத்தப்பட்டதோ, அதே அளவுக்கு தொடர்ந்து இவற்றை பாதுகாப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய அரசு துறைகளின் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும்.

நகரை சுத்தமாக வைத்திருக்கு உள்ளாட்சி அமைப்புகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சாலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதேபோல் மைதானங்கள், தெரு விளக்குகள், குறியீடுகள், பஸ் நிறுத்த நிழற்குடைகள், புல்வெளிகள், மேம்பாலங்கள், நடைமேம் பாலங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நகரின் அழகு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

இதேபோல் உள்கட்டமைப்புகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்தால் உடனடியாக அவற்றை சரி செய்ய உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினர் ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தி பணிகளை கண்காணிக்க வேண்டும்.

பாதாள ரயில் நிலையங்கள் மற்றும் சாலைகளின் சுத்தப் பணியை மெட்ரோ ரயில் நிறுவனமும், போலீசாரும் மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் செயல்படாத சிக்னல் விளக்குகள், பயன்படாத இரும்பு தடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஷீலா தீட்சித் பேசினார்.

 


Page 111 of 238