Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பழைய பாலம், சுரங்கப்பாதைகள் ரூ6 கோடி செலவில் புதுப்பிப்பு மாநகராட்சி தீவிரம்

Print PDF

தினகரன் 19.10.2010

பழைய பாலம், சுரங்கப்பாதைகள் ரூ6 கோடி செலவில் புதுப்பிப்பு மாநகராட்சி தீவிரம்

சென்னை, அக். 19: சேதமடைந்துள்ள பழைய பாலங்கள், சுரங்கப்பாதைகள் ரூ6 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருவதாக மேயர் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி சார்பில் சேத்துப்பட்டு கெங்கு சாலையில் உள்ள சுரங்கப்பாதையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ117 கோடியே 58 லட்சம் செலவில் 6 மேம்பாலங்கள், ஒரு சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ83 கோடியே 32 லட்சம் செலவில் 6 சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. அதே நேரத்தில் பழைய பாலங்கள், சுரங்கப்பாதைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

காயிதே மில்லத் கல்லூரி அருகில் உள்ள பின்னி பாலம், தங்கசாலை பார்த்தசாரதி பாலம், கண்ணகி சிலை அருகே உள்ள சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, எழும்பூர் காந்தி இர்வின் சாலை பாலம், அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகியவை ரூ2 கோடியே 28 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. அடையாறு திருவிக பாலம், வைத்தியநாதன் பாலம் உள்பட பல்வேறு பணிகள் ரூ3 கோடியே 65 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேத்துப்பட்டு கெங்கு சாலையில் உள்ள சுரங்கப்பாதை பூந்தமல்லி சாலையையும், எழும்பூர் பகுதியையும் இணைக்கும் முக்கிய சுரங்கப் பாதையாகும்.

இங்கு சேதமடைந்த கைப்பிடி சுவர், சிமென்ட் கான்கிரீட் சாலை, நடைபாதை சீரமைக்கப்படுகிறது. சுவர்களில் தமிழர் பண்பாட்டை விளக்கும் அழகிய சித்திரங்கள் தீட்டப்படுகிறது. ரூ21.22 லட்சம் செலவில் நடக்கும் இந்தப் பணிகள் ஜனவரி மாதம் முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார். மண்டல குழு தலைவர் அன்புதுரை, கவுன்சிலர் ருக்மாங்கதன், மண்டல அலுவலர் சம்பத், செயற்பொறியாளர் ராமு உடன் இருந்தனர்.

 

ரூ1 கோடி செலவில் பெங்களூரில் 5 புதிய பூங்கா

Print PDF

தினகரன் 19.10.2010

ரூ1 கோடி செலவில் பெங்களூரில் 5 புதிய பூங்கா

பெங்களூர், அக். 19: பெங்களூர் மாநகரில் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் தலா 10 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ1 கோடி செலவில் 5 புதிய ட்ரி பார்க் (மர பூங்காக்கள்) அமைக்க பெருமாநகராட்சி முடிவு செய்துள்ளது. மாநகரில் சுற்றுசூழலை பாதுகாக்கும் காக்கும் நோக்கத்தில் மாநகரில் புறநகர் பகுதியான தாசரஹள்ளி, ராஜராஜேஷ்வரிநகர், பொம்மனஹள்ளி, எலங்கா மற்றும் மகாதேவபுரா ஆகிய பகுதிகளில் தலா 2 ஏக்கர் நிலப்பரப்பில் மர பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்த பட்சம் 500 முதல் ஆயிரம் மர கன்றுகள் நடவும் தீர்மானித்துள்ளது. புதியதாக அமைக்கப்படும் மர பூங்காக்களில் விசாலமாக வளரும் ஆலமரம், அரசமரம், வேப்பம், புங்கை உள்பட பல தரமான மரங்கள் நடப்படுகிறது. ஒவ்வொரு பூங்காவிற்கும் தலா ரூ20 லட்சம் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூங்கா பராமரிப்பு பணியை மாநகராட்சியின் தோட்டக்கலை துறை மேற்கொள்கிறது. பொதுவாக மாநகரின் முக்கிய சாலைகளில் மரம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தினால், கேபில் பதிப்பு உள்பட பல பணிகளின் போது செடிகள் சேதமடைகிறது. புயல் காற்று வீசும் சமயத்தில் சாலையில் விழுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் நோக்கத்தில் புறநகர் பகுதியில் மர பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

 

கெங்கு ரெட்டி சாலை சுரங்கப்பாதை: புதுப்பிக்கும் பணி ஜனவரியில் நிறைவு

Print PDF

தினமலர் 19.10.2010

கெங்கு ரெட்டி சாலை சுரங்கப்பாதை: புதுப்பிக்கும் பணி ஜனவரியில் நிறைவு

சென்னை : சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி சாலை சுரங்கப்பாதை 21 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் உள்ள பழைய சுரங்கப் பாதைகள் மற்றும் மேம்பாலங்களை புதுப்பிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அரங்கநாதன் சுரங்கப்பாதை, காந்தி இர்வின் சாலை பாலம், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, தங்கசாலை பார்த்தசாரதி பாலம், பின்னி பாலம், கண்ணகி சிலை அருகில் உள்ள சுரங்கப்பாதை, எல்.பி., சாலையில் கால்வாய் குறுக்கே உள்ள பாலம் ஆகிய ஏழு சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் இரண்டு கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அதுபோல் வைத்தியநாதன் மேம்பாலம், சென்ட்ரல் எதிரில் ஸ்டேன்லி மேம்பாலம்.

திரு.வி.., பாலம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, தண்டையார்பேட்டை, தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை அருகில் சுரங்கப் பாதைகள் போன்று பல சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் மூன்று கோடியே 65 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கெங்கு ரெட்டி சாலை சுரங்கப்பாதை 21 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பணியை மேயர் சுப்ரமணியன் நேற்று காலை தொடங்கி வைத்தார். "ஜனவரி மாதத்திற்குள் கெங்கு ரெட்டி சாலை சுரங்கப்பாதை புதுப்பிக்கும் பணி முடிக்கப்படும். சுரங்கப் பாதையில் பக்கவாட்டு சுவர்களில் தமிழர் பண்பாட்டை விளக்கும் ஓவியங்கள் வரையப்படும்' என்று மேயர் சுப்ரமணியன் கூறினார். மேயருடன் கவுன்சிலர்கள், அதிகாரிகள், உடனிருந்தனர்.

 


Page 118 of 238