Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ17 கோடி செலவில் 22 மார்க்கெட்கள் புதுப்பிக்கப்படுகிறது

Print PDF

தினகரன் 07.10.2010

ரூ17 கோடி செலவில் 22 மார்க்கெட்கள் புதுப்பிக்கப்படுகிறது

மும்பை, அக்.7:புறநகர் பகுதிகளில் உள்ள 22 மார்க்கெட்களை ரூ17 கோடி செலவில் புதுப்பிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்களை புதுப்பித்து புது வடிவம் மற்றும் சின்னம் கொடுக்கும் திட்டத்தை மாநகராட்சி நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

இது பற்றி மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ராகுல் ஷெவாலே கூறியதாவது:

தூய்மையான மார்க்கெட், சுத்தமான மார்க்கெட்என்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்ளும். இதற்காக மேற்கு புறநகர் பகுதிகளில் செயல்படும் 11 மார்க்கெட்களும் கிழக்கு புறநகர் பகுதிகளில் 11 மார்க்கெட்களும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

தனியார் மார்க்கெட்களுக்கு இணையாக இந்த மாநகராட்சி மார்க்கெட்கள் மேம்படுத்தப்படும். அனைத்து மார்க்கெட்களும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருக்கும், புதிய சின்னம் ஒதுக்கப்படும். இதற்காக ரூ17 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகராட்சி மார்க்கெட்கள் புதுப்பிக்கப்பட்டு விட்டால் தனியார் மால்கள் போன்ற தோற்றத்தை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த திட்டப்பணி அடுத்த மாதம் தொடங்கும். மார்க்கெட்களை சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்கும் பணி துப்புரவு பணியில் நவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுபவர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

நகராட்சி புதிய அலுவலக கட்டடம் இன்று திறப்பு

Print PDF

தினமலர் 07.10.2010

நகராட்சி புதிய அலுவலக கட்டடம் இன்று திறப்பு

வால்பாறை: வால்பாறை நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகம், பூங்கா மற்றும் நகராட்சி ஆய்வு மாளிகை ஆகிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் உமாநாத் தலைமையில் இன்று(7ம் தேதி) காலை 11.30 மணிக்கு நடக்கிறது.புதிய கட்டடத்தை அமைச்சர் பழனிச்சாமி, சட்டசபை மனுக்கள் குழுத்தலைவர் கோவைதங்கம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.விழாவில் பொள்ளாச்சி எம்.பி.., சுகுமார், முன்னாள் எம்.எல்.., சிங்காரவேலு, நகராட்சித்தலைவர் கணேசன், துணைத்தலைவர் ராஜதுரை, பொறியாளர் சுப்பிரமணியம் உட்பட பலர் பேசுகின்றனர். நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார் நன்றி கூறுகிறார்.

Last Updated on Thursday, 07 October 2010 07:49
 

பெரம்பூர் நவீன இறைச்சிக்கூடம் டிசம்பரில் திறப்பு: மேயர்

Print PDF

தினமணி 06.10.2010

பெரம்பூர் நவீன இறைச்சிக்கூடம் டிசம்பரில் திறப்பு: மேயர்

சென்னை, அக்.5: பெரம்பூரில் 48 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன இறைச்சிக்கூடம் வரும் டிசம்பரில் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் நவீன இறைச்சிக்கூடத்தினை மேயர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த 2006-ம் ஆண்டில் நவீன இறைச்சிக்கூடத்திற்கான பணியினை துணை முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்பணி ஆக்ரோ இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, 2009-ல் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள இறைச்சிக்கூடம் 1903-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த பழமையான இறைச்சிக்கூடத்தை மாற்றியமைத்து, நவீன முறையில் 48 கோடியில் வடிவமைத்தல், கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் (டி.பி..டி.) முறையில் கட்டப்படுகிறது.

9.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 6 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய பூங்கா அமைக்கப்படும்.

நவீன தொழில்நுட்பத்துடன் பிராணிகளை இறைச்சிக்காக வெட்டுவதுடன், கழிவுகளை நவீன முறையில் சுத்திகரித்து, வெளியேற்றப்படும். அங்கு ஒரு மணி நேரத்துக்கு 250 ஆடுகள் வெட்டத் திட்டமிடப்பட்டிருந்தது.

இப்போது வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, ஒரு மணி நேரத்துக்கு 500 ஆடுகளும், 60 மாடுகளும் வெட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாடுகள் வெட்டுவதற்கு தனியாக வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

இறைச்சியை விற்பதற்காக அங்குள்ள சுமார் 20, 30 சிறிய வியாபாரிகளுக்கு சிறிய வணிக வளாகக்கூடம் கட்டித் தரப்படும். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இப்போது வேலை செய்யும் தொழிலாளர்களே இதிலும் பணிபுரிவார்கள்.

இந்தப் புதிய கட்டடத்தில் ஆய்வகம், மழைநீர் வடிகால்வாய், குளிர்சாதன வசதிகள், பதப்படுத்தும் வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் மற்றும் அழகிய பூங்கா வசதிகளுடன் பெரம்பூர் இறைச்சிக்கூடம் வரும் டிசம்பர் மாத இறுதியில் திறக்கப்படும் என்றார் மேயர் மா.சுப்பிரமணியன். வி.எஸ்.பாபு எம்.எல்.., மண்டலக்குழு தலைவர் மா.கன்னியப்பன், தலைமை பொறியாளர் கே.விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 06 October 2010 10:56
 


Page 129 of 238