Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பெரம்பூரில் டிசம்பர் மாதம் திறப்பு ரூ48 கோடியில் பூங்காவுடன் இறைச்சிக் கூடம்

Print PDF

தினகரன் 06.10.2010

பெரம்பூரில் டிசம்பர் மாதம் திறப்பு ரூ48 கோடியில் பூங்காவுடன் இறைச்சிக் கூடம்

சென்னை, அக்.6: பெரம்பூரில் ரூ48 கோடியில் அழகிய பூங்காவுடன் உருவாகும் நவீன இறைச்சிக் கூடம் டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நவீன இறைச்சிக் கூடம் பெரம்பூரில் கட்டப்பட்டு வருகிறது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மேயர் கூறியதாவது:

துணை முதல்வர் மு..ஸ்டாலின் 1996ம் ஆண்டு சென்னை மேயராக இருந்த போது இந்த இறைச்சிக் கூடத்தை பக்தா நிறுவனம் மூலம் கட்ட முடிவு செய்தார். பின்னர் வந்த ஆட்சியாளர்கள் இதை தடுத்து நிறுத்தினர்.

2006ம் ஆண்டுக்கு பிறகு இந்த நவீன இறைச்சிக் கூடத்திற்கான பணியை துணை முதல்வர் துவக்கி வைத்தார். புதுடெல்லியைச் சேர்ந்த ஆக்ரோ இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் 2009 செப்டம்பரில் கட்டுமான பணியை தொடங்கியது. 1903ல் கட்டப்பட்ட பழமையான இந்த கூடத்தை மாற்றியமைத்து நவீன முறையில் ரூ48 கோடி செலவில் கட்டப்படுகிறது.

இந்த வளாகம் 9.4 ஏக்கரில் உள்ளது. இதில் 4 ஏக்கரில் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. மீதியுள்ள நிலப் பரப்பில் அழகிய பூங்கா அமைக்கப்படும். 2.60 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையமும் அமைக்கப்படுகிறது. இந்த கூடத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் இறைச்சிக்காக ஒரு மணிநேரத்திற்கு 250 ஆடுகள் வெட்ட திட்டமிடப்பட்டது. வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று ஒரு மணி நேரத்திற்கு 500 ஆடுகள் வெட்ட வழி செய்யப்பட்டுள்ளது. 60 மாடுகள் தனியாக வெட்ட வசதிகள் செய்யப்படும். இது தவிர இறைச்சி உறுப்புகளை விற்பதற்காக சுமார் 30 வியாபாரிகளுக்கு சிறிய அளவில் வணிக வளாகம் கட்டப்படும். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தற்பொழுது வேலை செய்யும் தொழிலாளர்களே இதிலும் பணிபுரிவார்கள்.

இந்த புதிய வளாகத்தில் பொதுக்கூடம், மழைநீர் வடிகால்வாய், பயோ பில்டர், குளிர்சாதன வசதிகள், பதப்படுத்தும் அறைகள், ஆடுகளை நவீனமுறையில் வெட்டுவதற்கான அறைகள், வாகனங்கள் நிறுத்த இடம் என பல்வேறு நவீன வசதிகளுடன் அழகிய பூங்காவுடன் இறைச்சிக் கூடம் உருவாகிவருகிறது.

இது டிசம்பர் மாதம் திறக்கப்படும். இந்தியாவில் இது போன்ற நவீன வசதிகள் உள்ள இறைச்சிக் கூடம் வேறு எங்கும் இருக்காது. இவ்வாறு மேயர் கூறினார். இந்த ஆய்வின் போது வி.எஸ்.பாபு எம்.எல்.., மண்டலக்குழுத் தலைவர் கன்னியப்பன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் நவீன இறைச்சிக் கூடத்தை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

 

ரூ.48 கோடியில் அமையும் பெரம்பூர் நவீன இறைச்சிக்கூடம் டிசம்பர் மாதம் திறக்கப்படும்; மேயர் மா. சுப்பிரமணியன் தகவல்

Print PDF

மாலை மலர்        05.10.2010

ரூ.48 கோடியில் அமையும் பெரம்பூர் நவீன இறைச்சிக்கூடம் டிசம்பர் மாதம் திறக்கப்படும்; மேயர் மா. சுப்பிரமணியன் தகவல்

ரூ.48 கோடியில் அமையும்
 
 பெரம்பூர் நவீன இறைச்சிக்கூடம்
 
 டிசம்பர் மாதம் திறக்கப்படும்;
 
 மேயர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை, அக். 5- பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் நவீன இறைச்சிக்கூடத்தை மேயர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் இந்த நவீன இறைச்சிக் கூடத்திற்கான பணியினை தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 2009ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே வில்லிவாக்கம், சைதாப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் ஆட்டிறைச்சிக் கூடங்கள் கட்டப்பட்டு, .எஸ்.. சான்றிதழ் பெறப்பட்டது.

சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள இந்த இறைச்சிக்கூடம் 1903ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த பழமையான இறைச்சிக் கூடத்தை மாற்றியமைத்து, நவீன முறையில் ரூபாய் 48 கோடி செலவில் வடிவ மைத்தல், கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் டிபிஓடி முறையில் கட்டப்படுகிறது. 9.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப்பணிகள் மேற் கொள்ளப்படுகிறது.

மீதமுள்ள 6 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய பூங்கா அமைக்கப்படும். 3 இடங்களில் குளிர்சாதன வசதிகள், 2 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் அமைக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் பிராணிகளை இறைச்சிக்காக வெட்டும் பொருட்டு, அதனால் ஏற்படும் கழிவுகளை நவீன முறையில் சுத்திகரித்து, வெளியேற்றப்படும். அங்கு ஒரு மணி நேரத்திற்கு 250 ஆடுகள் வெட்ட திட்ட மிடப்பட்டிருந்தது.

தற்பொழுது வியாபாரிகளின் கோரிக்கைக்கு ஏற்று, இரண்டு மடங்காக்கி ஒரு மணி நேரத்திற்கு 500 ஆடுகளும், 60 மாடுகளும் வெட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாடுகள் வெட்டுவதற்கு தனியாக வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும் இங்குள்ள இறைச்சி உறுப்புக்களை விற்பதற்காக அங்குள்ள சுமார் 20, 30 சிறிய வியாபாரிகளுக்கு சிறிய வணிக வளாகக்கூடம் கட்டித்தரப்படும். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தற்பொழுது வேலை செய்யும் தொழிலாளர்களே இதிலும் பணிபுரிவார்கள்.

இந்த புதிய கட்டடத்தில் ஆய்வகம், பொதுக்கூடம், மழைநீர் வடிகால்வாய், பயோ பில்டர், குளிர்சாதன வசதிகள், பதப்படுத்தும் அறைகள், ஆடுகளை நவீன முறையில் வெட்டுவதற்கான அறைகள், சாலை வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்படும். இந்த பெரம்பூர் இறைச்சிக் கூடம் அழகிய பூங்கா வசதிகளுடன் வரும் டிசம்பர் திங்கள் இறுதியில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது வி.எஸ். பாபு, எம்.எல்.., மண்டல குழுத்தலைவர் மா. கன்னியப்பன், தலைமைப் பொறியாளர் கே. விஜயகுமார், மேற் பார்வை பொறியாளர் குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Tuesday, 05 October 2010 11:43
 

நன்னகரத்தில் ரூ.27 லட்சத்தில்சமுதாய நலக்கூடம் கட்டும் பணி: எம்.எல்.ஏ.ஆய்வு

Print PDF

தினமலர் 05.10.2010

நன்னகரத்தில் ரூ.27 லட்சத்தில்சமுதாய நலக்கூடம் கட்டும் பணி: எம்.எல்..ஆய்வு

தென்காசி:மேலகரம் டவுன் பஞ்., நன்னகரத்தில் 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் பணியை எம்.எல்..கருப்பசாமி பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலகரம் டவுன் பஞ்.,நன்னகரத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட எம்.எல்..கருப்பசாமி பாண்டியன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். மேலும் மேலகரம் டவுன் பஞ்.,பொது நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து சமுதாய நலக்கூடம் கட்டும் பணி துவங்கியது.இப்பணியை எம்.எல்..கருப்பசாமி பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும் போது, ""நன்னகரத்தில் 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் இப்பகுதி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இரண்டு தளங்களை கொண்ட இந்த சமுதாய நலக்கூடத்தின் பணி ஆறு மாதங்களில் முடிவடையும். கட்டடம் தரமானதமாக இருக்கும்'' என்றார்.நிகழ்ச்சியில் மேலகரம் டவுன் பஞ்., தலைவர் குமார், நிர்வாக அதிகாரி லெனின், கவுன்சிலர் வேலு, தென்காசி நகராட்சி தலைவர் கோமதிநாயகம், மேலகரம் செயலாளர் சுடலை, சுந்தர், தென்காசி ஒன்றிய செயலாளர் ராமையா, ஆயிரப்பேரி முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 131 of 238