Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

குழித்துறை நகராட்சி படிப்பகத்துக்கு புதிய கட்டிடம்

Print PDF

தினகரன் 05.10.2010

குழித்துறை நகராட்சி படிப்பகத்துக்கு புதிய கட்டிடம்

மார்த்தாண்டம் அக்.5: குழித்துறை நகராட்சி வாவுபலி மைதானத்தின் அருகே நகராட்சி படிப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் படிப்பகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எம்பி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய கட்டிடத்துக்கு ரூ2.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதற்கான பணி தொடக்க விழா நேற்று நடந்தது. குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி இன்ஜினியர் ரமேஷ்,கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கட்டுமான பணி தொடக்கம் ரூ24 லட்சம் செலவில் கிண்டியில் பஸ் நிழற்குடை

Print PDF

தினகரன் 05.10.2010

கட்டுமான பணி தொடக்கம் ரூ24 லட்சம் செலவில் கிண்டியில் பஸ் நிழற்குடை

சென்னை, அக். 5: கிண்டியில் ரூ24 லட்சம் செலவில் 2 புதிய பஸ் நிறுத்தங்களுக்கான கட்டுமானப் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

மேயர் மா.சுப்பிரமணியன் தனது 140வது வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ24 லட்சத்தை 2 புதிய பஸ் நிறுத்தம் கட்ட ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், கிண்டி காவல் நிலையம் அருகில் ஒரு பஸ் நிறுத்தமும், கத்திபாரா சாலையில் ஒரு பஸ் நிறுத்தமும் கட்டப்படுகின்றன. இதற்கான கட்டுமானப் பணியை கிண்டி தொழிற்பேட்டை அருகில் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பணிகள் 3 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு பஸ் நிறுத்த நிழற்குடைகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

ஆக்கிரமித்து ஜல்லி உடைப்பு வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடை கட்டப்படுமா?

Print PDF

தினகரன் 05.10.2010

ஆக்கிரமித்து ஜல்லி உடைப்பு வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடை கட்டப்படுமா?

தண்டையார்பேட்டை, அக். 5: வைத்தியநாதன் பாலத்தை ஆக்கிரமித்து ஜல்லி உடைக்கும் தொழில் நடக்கிறது. இதை அகற்றி அப்பகுதியில் மாநகராட்சி கடைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதற்கு வைத்தியநாதன் மேம்பாலம் என்று பெயர்.

இதன் ஒருபுறத்தில் இளையமுதலி தெருவில் இருந்து தண்டையார்பேட்டை ரயில் நிலையம் செல்லும் பாதையில் மேம்பாலத்தின்கீழ் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் தனியார் ஆக்கிரமிப்பால் பாழடைந்து வருகிறது.

ஒருபுறம் மேம்பாலத்தில் மாட்டு சாணத்தை தட்டி காய வைக்கின்றனர். மறுபுறத்தில், செங்கல் ஜல்லி உடைக்கும் தொழிலகமாக மாறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு மழையின் போதும் இங்கு தண்ணீர் தேங்கி மோசமாகிறது. தண்டையார்பேட்டை ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

சென்னை நகரின் பல இடங்களில் பாலத்தின் கீழ் உள்ள இடங்கள் கடைகள் கட்டப்பட்டு, வருவாய் தரும் இடங்களாக மாறியுள்ளன.

அதேபோல வைத்தியநாதன் மேம்பாலத்துக்கு கீழ் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைகள் அல்லது குடோன்கள் கட்டி விட்டால் வருவாய்க்கு வருவாயும் கிடைக்கும், அந்த பகுதியும் சுத்தமாக இருக்கும் என ரயில் பயணிகள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

 


Page 133 of 238