Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

Print PDF

தினமணி 23.09.2010

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

திருப்பத்தூர்,செப்.22:​ திருப்பத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இரண்டு இடங்களிலும்,​​ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இரண்டு இடங்களிலும் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.​ ​

​ ​ ​ ​ ​ ​ ​ திருப்பத்தூர் நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

​ ​ அதற்கான பூமி பூஜையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். ​ ​ காளியம்மன் கோயில் அருகிலும் வாரச் சந்தை அருகிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் தொடங்கப்படவுள்ளது.

சிவகங்கை சாலையில் உரக்கிடங்கு அருகிலும்,​​ தென்மாபட்டு அட்டக்குளம் அருகிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. ​ ​ மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்கிடவும் விவசாயத்துக்கு கழிவுநீரை சுத்திகரித்து நல்ல நீரை வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

​ ​ இதற்கான ஓப்பந்தம் கடந்த மாதம் புதுதில்லியில் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன் திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் என்.எம்.சாக்ளா முன்னிலையில்,​​ வாட்டர் சிஸ்டம்ஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துடன் கையெழுத்தானது. இப்பணியை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிகளைத் தொடக்கு வதற்கான பூமி பூஜையை புதன்கிழமை அமைச்சர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.​ இதில் திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் என்.எம்.சாக்ளா,​​ துணைத் தலைவர் கார்த்திகேயன்,​​ ​ இளம் விஞ்ஞானி பஞ்சாட்சரம்,​​ தி.மு..​ ஒன்றியச் செயலாளர் செழியன்,​​ பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா,​​ கவுன்சிலர்கள் முருகானந்தம்,​​ சரவணப்பெருமாள்,​​ கவிதாகுமார்,​​ சுப்புலெட்சுமி,​​ பதிகண்ணன்,​​ காளிமுத்து,​​ ஆகியோர் கலந்து கொண்டனர்.​ ​​ ​ இத்திட்டம் ஓராண்டில் முடிக்கப்பட்டு பின்பு ஓராண்டுவரை வாட்டர் சிஸ்டம் இண்டியா நிறுவனத்தின் பராமரிப்பிலும்,​​ பின்னர் பேரூராட்சி வசம் ஓப்படைக்கப்படும். ​ ​ இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கும்,​​ விவசாயத்துக்குத் தேவையான பாசன நீரும் கிடைக்கும்.​ செயல் அலுவலர் அமானுல்லா நன்றி கூறினார்.

 

திருப்புத்தூரில் பாதாள சாக்கடைப்பணி திட்டம் அடுத்த ஆண்டு துவங்கும் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

Print PDF

தினகரன் 23.09.2010

திருப்புத்தூரில் பாதாள சாக்கடைப்பணி திட்டம் அடுத்த ஆண்டு துவங்கும் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

திருப்புத்தூர், செப்.23: திருப்புத்தூரில் பாதாள சாக்கடைப்பணி திட்டம் அடுத்த ஆண்டு துவங்கும் என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். திருப்புத்தூர் காளியம்மன் கோயில் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் பூமிபூஜை நடந்தது. சென்னை வாட்டர் சிஸ்டம்ஸ் பி.லிட் விஞ்ஞானி பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் சாக்ளா வரவேற்றார். பூமிபூஜையை துவக்கி வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:

மத்திய, மாநில அரசுகள் சார்பில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. நாட்டில் ஆயிரக்கணக்கில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களில் 51 இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இதில், திருப்புத்தூர் பேரூராட்சியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த குடிநீர் பிரச்னை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தீர்ந்தது. தற்போது சுகாதாரமான குடிநீர் கிடைக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை நடத்தப்பட்டுள்ளது.

இன்னும் 11 மாதத்திற்குள் திட்டம் நிறைவேற்றப்படும். அதற்குள் விரை வாக முடிக்க உத்தரவிட்டுள்ளேன். தற்போது காளியம்மன் கோயில் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இதேப் போல் சந்தைப்பேட்டை அருகே மற்றொரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட உள்ளது. வரும் காலங்களில் நகரின் அனைத்து வார்டுகளிலும் விரிவுப்படுத்தப்படும். தமிழகத்தில் 5 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதில் திருப்புத்தூர் பேரூராட்சியும் ஒன்று.

இத்திட்டத்திற்காக ரூ.15 கோடி வழங்க அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டில் பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கும். அடிப்படை வசதிகள் இல் லாமல் இருந்ததால் பலர் வெளி இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இனி திருப்புத்தூரை தேடி வரும் நிலை உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திமுக ஒன்றியச்செயலாளர் செழியன், பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திகேயன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன், வர்த்தக சங்கத்தலைவர் லட்சுமணன், பொரு ளாளர் பிச்சைமுகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயல்அலுவலர் அமானுல்லா நன்றி கூறினார்.

 

பழைய சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் மாடி பார்க்கிங் : ரூ.12.6 கோடியில் மாநகராட்சி திட்டங்கள்

Print PDF

தினமலர் 23.09.2010

பழைய சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் மாடி பார்க்கிங் : ரூ.12.6 கோடியில் மாநகராட்சி திட்டங்கள்

மதுரை : மதுரையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் 5.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாடி "பார்க்கிங்' அமைகிறது. இத்திட்டம் உள்பட 12.6 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறுதிட்டங்களுக்கு அக்.,3ம் தேதி மத்திய அமைச்சர் மு..அழகிரி அடிக்கல் நாட்டுகிறார்.

மதுரையில் புராதனசின்னங்கள் அமைந்துள்ள இடங்களை மேம்படுத்த, மத்திய சுற்றுலா துறை 12.6 கோடி ரூபாய் நிதிஅளிக்கிறது. இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. பழைய சென்ட்ரல்மார்க்கெட் இருந்த இடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கார் "பார்க்கிங்' அமைகிறது. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி, ஒரு கி.மீ., சுற்றளவிற்கு உயரக் கட்டுப்பாடு உள்ளதால், 4.5 மீட்டர்உயரத்திற்கு, 500 கார்கள்நிற்கும்வகையில், "பார்க்கிங்' கட்டடம் கட்டப்படும்.

வரவேற்பு அறை, பொருட்கள் வைப்பு அறை, கழிப்பறை போன்றவையும் இங்கு அமைக்கப்படும். புது மண்டபத்தில் உள்ள சிற்பங்களை பொதுமக்கள் பார்வையிட வகை செய்யும் விதத்தில், அங்குள்ளகடைகள் காலி செய்யப்பட உள்ளன. இக்கடைகள் அருகில் உள்ள குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்படும். இதற்காக, குன்னத்தூர் சத்திரத்தில் 2.32 கோடி ரூபாய் செலவில் கடைகள் கட்டப்பட உள்ளன.

மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி தற்போது புல் தரை அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை மேலும் அழகுபடுத்தும் பொருட்டு, இங்கு அலங்கார மின் விளக்குகள், 42.56 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். கோயிலின் அருகே உள்ள மீனாட்சி பூங்கா, 35.24 லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தப்

படும். பழமையை பாதுகாக்கும் பொருட்டு, 28.85 லட்சம் ரூபாய் செலவில் விளக்குத்தூண் அழகுபடுத்தப்படும். 75 லட்சம் ரூபாய் செலவில் தெற்கு மண்டல அலுவலகம் அமைந்துள்ள கோட்டை புதுப்பிக்கப்படும்.

மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீரை தேக்கி, அழகுபடுத்த 3.10 கோடி ரூபாய் செலவிடப்படும். பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வழியை காட்டும் போர்டுகள், 19 லட்சம் ரூபாய் செலவில் வைக்கப்படும்.

அடிக்கல்: அனைத்து திட்டங்களுக்கும் ஒரே இடத்தில், அக்.,3ம் தேதி நடக்கும் விழாவில் மத்திய அமைச்சர் மு..அழகிரி அடிக்கல் நாட்டுகிறார். நேற்று காலை திடீரென மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த அழகிரி, மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், துணை மேயர் மன்னன், தலைமை பொறியாளர் சக்திவேல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட தி.மு.., செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு, மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

பின் நிருபர்களிடம் பேசிய அழகிரி, ""அடிக்கல் விழாவின் போது, மேலவாசலில் வீட்டுவசதி வாரியம் கட்டியுள்ள வீடுகளும் திறக்கப்படும்'' என்றார்.

 


Page 138 of 238