Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

டவுன் பஞ்., அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா

Print PDF

தினமலர் 15.09.2010

டவுன் பஞ்., அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா

கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த தாராசுரம் டவுன் பஞ்சாயத்து புதிய அலுவலகத்தை தமிழக நிதியமைச்சர் அன்பழகன் நேற்றுமுன்தினம் திறந்து வைத்தார்.தாராசுரம் டவுன் பஞ்சாயத்தில் டவுன் பஞ்சாயத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 12.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட டவுன் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக கூடம் ஆகியவற்றை நிதியமைச்சர் அன்பழகன் ரிப்பன் வெட்டி, கல்வெட்டை திறந்து வைத்தார்.

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் தலைமை வகித்தார். கலெக்டர் சண்முகம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கல்யாணசுந்தரம், அன்பழகன், தாராசுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சரஸ்வதிஅம்மாள், முன்னாள் தலைவர் அசோக்குமார், செயல் அலுவலர் மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.நிதியமைச்சர் அன்பழகன் பேசுகையில், ""தாராசுரம் டவுன் பஞ்சாயத்தில் 2008 - 09ம் ஆண்டில் அனைத்து டவுன் பஞ்சாயத்து அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நான்கு முக்கிய சாலைகள் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. 3,165 குடும்பங்களுக்கு இலவச "டிவி' வழங்கப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் அருகில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.""இதுபோல், பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அடிப்படை வசதிகள் பாரபட்சம் இல்லாமல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக,'' தெரிவித்தார்.

 

நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ5.76 கோடியில் வணிக வளாகங்கள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

Print PDF

தினகரன் 14.09.2010

நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ5.76 கோடியில் வணிக வளாகங்கள் துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்தார்

பாண்டிபஜார், அயனாவரம், ராயபுரம் பகுதிகளில் ரூ5.76 கோடி செலவில் நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகங்களை துணை முதல்வர் மு..ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, கடை ஒதுக்கீடுக்கான அடையாள அட்டையை வியாபாரிக்கு வழங்குகிறார். அருகில், மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் அன்பழகன். அடுத்த படம்: பாண்டிபஜார் வணிக வளாக கட்டிடம்.

சென்னை, செப் 14: நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார். பாண்டிபஜார், அயனாவரம், ராயபுரம் ஆகிய 3 இடங்களில் ரூ5.76 கோடியில் நடைபாதை வியாபாரிகளுக்கான வணிகவளாகம் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா, பாண்டிபஜார் வணிக வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. துணை முதல்வர் மு..ஸ்டாலின் ரிப்பன் வெட்டி வணிக வளாகத்தை திறந்து வைத்தார்.

பாண்டிபஜாரில் ரூ4.3 கோடியில் 3 மாடிகளில் 644 கடைகள் கட்டப்பட்டன. 3 லிப்ட்கள், 36 கழிவறைகள், வாகனம் நிறுத்த இடவசதி ஆகியவை உள்ளன. அயனாவரத்தில் ஒரு கோடியே 19 லட்சத்தில் 332 கடைகள் கட்டப்பட்டன. ராயபுரம் எம்.சி.சாலையில், ரூ27 லட்சத்தில் 33 கடைகள் கட்டப்பட்டன. மொத்தம் 1,109 கடைகள் கட்டப்பட்டுள்ளன.

கடை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கி துணை முதல்வர் மு..ஸடாலின் பேசியதாவது:

இந்த வணிக வளாகங்களை வணிகர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நான் 2 முறை சென்னை மேயராக இருந்தேன். இடையில் மேயர் பொறுப்பு தட்டி பறிக்கப்பட்டது. அதற்காக சட்டமும் கொண்டுவரப்பட்டது. இதை நீங்கள் அறிவீர்கள். என்னிடம் ஒரு நிருபர் உங்கள் சூளுரையின்படி சென்னையை சிங்கார சென்னையாக்க முடிந்ததா? என்று கேட்டார். அதற்கு நான், மேயர் பொறுப்பில் இருந்தபோது 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. இப்போது 80 முதல் 90 சதவீதம் வரை முடிந்துள்ளது என்றேன். பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பின் மூலம் தான் 100 சதவீதத்தை எட்ட முடியும்.

தேர்தல் அறிக்கையில் இல்லாத திட்டமான கலைஞர் காப்பீட்டு திட்டம் மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தையும் நிறைவேற்றி வருகிறோம். ஊரக பகுதிகளில் 22 லட்சம் குடிசை வீடுகளுக்கு மாற்றாக நிரந்தர கான்கிரீட் வீடுகளை கட்டி வருகிறோம்.

இந்தாண்டு 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 30 சதவீத பணிகள் முடிந்துள்ளன. ஜனவரி 31ம் தேதிக்குள் 3 லட்சம் வீடுகளும் திறந்து வைக்கப்படும். மீதமுள்ள 18 லட்சம் வீடுகளையும் கலைஞர் மீண்டும் முதல்வராகி திறந்துவைப்பார். அதில் சந்தேகம் வேண்டாம். இந்த திட்டத்தை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இதை நாங்கள் நேரில் ஆய்வு செய்தபோது உணர்ந்தோம். வேண்டும் என்றே திட்டமிட்டு அரசியல் உள் நோக்கத்துடன் சில தலைவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து 3 ஆயிரம் கோடி நிலத்தை மாநகராட்சி மீட்டு, பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைத்துள்ளது. இது முடிவல்ல. இந்த பணி தொடரும். இன்னும் ஆயிரம் கோடி மதிப்புள்ள 600 கிரவுண்ட் நிலத்தை மீட்கும் பணி நடந்து வருகிறது. இது மாநகராட்சியின் சாதனையாகும். பொதுமக்களிடம் இருந்து எந்த வரியும் கூடுதலாக பெறாமல் இவ்வளவு திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு மு.. ஸ்டாலின் பேசினார்.

மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். டி.கே.எஸ்.இளங்கோவன், எக்ஸ்னோரா நிர்மல், கவுன்சிலர்கள் ராமலிங்கம், சைதைரவி, கே.ஏழுமலை பேசினர். மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி வரவேற்றார். இணை ஆணையர் ஆசிஸ் சட்டர்ஜி நன்றி கூறினார். மாவட்டச் செயலாளர்கள் அன்பழகன். வி.எஸ்.பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

புதுக்கடையில் ரூ3 லட்சத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி

Print PDF

தினமணி 13.09.2010

புதுக்கடையில் ரூ3 லட்சத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி

கருங்கல், செப். 12: புதுக்கடை பேரூராட்சிக்குள்பட்ட மாடச்சேரி பகுதியில் ரூ 3 லட்சம் செலவில் தடுப்புச் சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை கிள்ளியூர் எம்எல்ஏ ஜான்ஜேக்கப் ஆய்வு செய்தார். மாடச்சேரி செல்லும் சாலை பழுதடைந்தும், தடுப்புச் சுவர் இல்லாமலும் அப் பகுதி மக்கள் மிகவும் அவதியுற்றனர்.

இதையடுத்து, அப் பகுதியினரின் கோரிக்கையையடுத்து எம்எல்ஏ ஜான்ஜேக்கப், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 3 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அதை அவர் ஆய்வு செய்தார். புதுக்கடை பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திக், துரை, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பிரான்சிஸ், பாலப்பள்ளம் பேரூராட்சி கவுன்சிலர் பால்ராஜ் உள்ளிடோர் உடனிருந்தனர்.

 


Page 142 of 238