தினகரன் 06.09.2010
கிங் சர்கிள் மேம்பாலம் திட்டமிட்டப்படி ஜனவரியில் செயல்பட துவங்கும்
கிங் சர்கிள், செப். 6 : கிங் சர்கிளில் புதிதாக கட்டப் பட்டு வரும் மேம்பால பணி கள் வரும் டிசம்பர் மாதத் திற்குள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வாகன போக்குவரத் திற்கு திறந்து வைக்கப்படு மென மும்பை பெரு நகர வளர்ச்சிக் ஆணைய அதி காரிகள் தெரிவித்தனர்.
கிங் சர்கிளில் 79 கோடி ரூபாய் செலவில் 1,500 மீட்டர் நீளத்திற்கு துல்புலே சவுக்கில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலம் 17 மீட்டர் அகலமுடையது. வடக்கு நோக்கி செல் லும் நானாலால் மேம் பாலத்தை இணைக்கும் வித மாக இந்த பாலம் கட்டப்ப டுகிறது. இப்பணிகள் வரும் டிசம்பர் மாதம் நிறை வடைந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வாகன போக்குவரத்திற்கு திறந்து வைக் கப்படுமென எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பையில் ஏற்கனவே புதிதாக 6 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. தாகூர் காம்ப்ளக்ஸ், தீன் தோஷி, உள்ளூர் விமான நிலையம் அருகில், நவ்கர் ஜங்சன், ஹிந்த்மாதா ஜங் சன் மற்றும் சயான் ஆகிய 6 இடங்களில் ஏற்கனவே புதிய மேம் பாலங் கள் கட்டப்பட்டு வாகன போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.