Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பெரம்பலூர் நகராட்சிக்கு குப்பை சேகரிக்கும் வண்டிகள்

Print PDF

தினமணி 31.08.2010

பெரம்பலூர் நகராட்சிக்கு குப்பை சேகரிக்கும் வண்டிகள்

பெரம்பலூர், ஆக. 30: பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் | 4 லட்சம் மதிப்பில் குப்பைகள் சேகரிக்கும் வண்டிகள் பெறப்பட்டு,பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை முதல் விடப்பட்டன.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் எம்.என். ராஜா கூறியது:

பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட 21 வார்டுகளில் உள்ள நகர மக்களின் வீடுகளுக்குச் சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைச் சேகரித்து, பெரம்பலூர் அருகேயுள்ள கவுள்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கில் சேகரிக்க உள்ளது.

அதனடிப்படையில், தற்போது | 8 ஆயிரம் மதிப்பிலான 50 குப்பை சேகரிக்கும் வண்டிகள் | 4 லட்சத்துக்கு பெறப்பட்டுள்ளது. இந்த வண்டிகள் மூலம் நகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று, குப்பைகளைச் சேகரிக்க உள்ளனர்.

இந்த வண்டிகளில் உள்ள பச்சை பெட்டியில் மக்கும் குப்பைகளும், சிகப்புப் பெட்டியில் மக்காத குப்பைகளும் சேகரிக்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள, இந்த வாகனங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியின் போது, நகராட்சி ஆணையர் (பொ) கருணாகரன், நகராட்சித் துணைத் தலைவர் கி. முகுந்தன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாரி, ஜே.எஸ்.ஆர். கருணாநிதி, சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம், பணி மேற்பார்வையாளர்கள் ராகவன், மோகன், கோபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

ரூ2.50 கோடியில் புதிய தெற்கு மண்டல அலுவலகம் திறப்பு

Print PDF

தினமணி 31.08.2010

ரூ2.50 கோடியில் புதிய தெற்கு மண்டல அலுவலகம் திறப்பு

மதுரை, ஆக. 30: மதுரை மாநகராட்சி சார்பில் மேலமாரட் வீதியில் ரூ| 2.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தெற்கு மண்டல அலுவலகத்தை மேயர் கோ. தேன்மொழி திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

இதுவரையில், தெற்கு மண்டல அலுவலகம் பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள பழங்காலக் கோட்டையில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், பொதுமக்கள் வந்து செல்வதற்கும்,வாகனங்களை நிறுத்துவதற்கும் பிரச்னை ஏற்பட்டதால் அலுவலகத்தை வேறிடத்துக்கு மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் இடத்தைத் தேர்வுசெய்து, புதிதாக |ரூ 2.50 கோடியில் அலுவலகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு, ஆணையாளர் எஸ்.செபாஸ்டின் தலைமை வகித்தார். துணை மேயர் பி.எம். மன்னன் மற்றும் துணை ஆணையாளர் க. தர்ப்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் தேன்மொழி புதிய அலுவலகத்தைக் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார். பின்னர் ஆணையாளர் கூறுகையில், மதுரை மாநகராட்சி 31-வது வார்டு முதல் 43-வது வார்டு வரையிலும், 60-வது வார்டு முதல் 65-வது வார்டு வரையில் தெற்கு மண்டலத்துக்கு உள்பட்டது.

புதிய அலுவலகத்தில், மண்டலத் தலைவருக்கு தனி அறை, கருத்தரங்கு கூடம், பொறியாளர்களுக்கு தனி அறை, பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 15 நாள்களுக்குள் புதிய அலுவலகம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.

பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கு நுழைவு வாயில் கோட்டைரூ |5 லட்சம் செலவில் மறு சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் மத்திய காய்கறி அங்காடிக் கடைகள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மத்திய காய்கறி அங்காடி விரைவில் செயல்படத் தொடங்கும் என ஆணையாளர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் அ.மாணிக்கம், வி.கே.குருசாமி, .இசக்கிமுத்து, கே,நாகராஜன், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

திடக்கழிவு திட்டத்தின் கீழ் ரூ4,50 லட்சத்தில் குப்பைஅள்ளும் நவீன இயந்திரம்

Print PDF

தினகரன் 31.08.2010

திடக்கழிவு திட்டத்தின் கீழ் ரூ4,50 லட்சத்தில் குப்பைஅள்ளும் நவீன இயந்திரம்

பெரம்பலூர், ஆக. 31: பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்களால் வெளியேற்றப்படும் குப்பைகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் ஆகியவற்றை தரம் பிரிக்கவும், தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கவும் பெரம்பலூர் நகராட்சியில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தலாரூ8,000 என ரூ50 லட்சம் மதிப்பில் குப்பை அள்ளும் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சித்தலைவர் இளையராஜா சுகாதாரப்பணிகளுக்காக அந்த இயந்திரங்களை ஒப்படைத்தார்.

நகராட்சி ஆணையர் (பொ) இன்ஜினியர் கருணாகரன், துணைத்தலைவர் முகுந்தன், கவுன்சிலர்கள் பாரி, ஜெயக்குமார், சிவக்குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 146 of 238