Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சுகாதார வளாகம் திறப்பு விழா

Print PDF

தினமலர்    21.07.2010

சுகாதார வளாகம் திறப்பு விழா

தா.பேட்டை: திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாக கட்டிடம் திறப்பு விழா நடந்தது.தா.பேட்டை டவுன் பஞ்சாயத்து 12வது வார்டு மேலத்தெருவில் தொட்டியம் சட்டசபைத் தொகுதி வளர்ச்சி நிதி மூன்று லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகத்தை கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் குடிநீர் மற்றும் சுகாதார நலச்சங்கம் (அவாஸ்) உறுப்பினர்கள் பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.

சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது. கிராமாலயா தொகுதி ஒருங்கிணைப்பாளர் பழனியாண்டி, தொழில்நுட்ப அலுவலர் ராஜேஷ், பகுதி ஒருங்கிணைப்பாளர் ராணி, குடிநீர் நலச்சங்க செயலாளர் அய்யப்பன், குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 21 July 2010 06:10
 

பாதாள சாக்கடையில் அடைப்பு நீக்கஇயந்திரம்

Print PDF

தினமலர்     21.07.2010

பாதாள சாக்கடையில் அடைப்பு நீக்கஇயந்திரம்

திருப்பூர் பாதாள சாக்கடையில் அடைப்புகளை நீக்குவதற் காக, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் இரண்டு இயந்திரங்களை வாங்கியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக் கடை திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. படிப் படியாக இத்திட்டம் முழுமைப்படுத்தப்பட உள்ள நிலையில், பாதாள சாக் கடையில் அடைப்பு ஏற் பட்டால் சரி செய்ய ஆட்கள் பயன்படுத்தப்பட்டனர்.நவீன முறையில் பாதாள சாக்கடை அடைப்பை விரைவில் சுத்தம் செய்யவும்; மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் போது ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கவும், மனித பயன்பாட்டை குறைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இதனடிப்படையில், மொத்தம் 12.5 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய இயந்திரங்கள் வாங் கப்பட்டுள்ளன. மூன்று சக்கர மினி டெம்போவில் பொருத்தப்பட்டுள்ளதால், எந்த இடத்துக்கும் விரைவாக எடுத்துச் செல்ல முடியும்.புதிதாக வாங்கப்பட்ட இயந்திரங்களை, மேயர் செல்வராஜ், கமிஷனர் ஜெயலட்சுமி நேற்று பார்வையிட்டனர். அவ் விரண்டு இயந்திரங்கள், பாதாள சாக்கடை பராமரிப்பு பிரிவில் ஒப்படைக் கப்பட்டன.

Last Updated on Wednesday, 21 July 2010 06:10
 

பிரப் ரோட்டில் நெரிசல் குறைக்க ரூ.24 லட்சத்தில் நடைபாதை மேம்பாலம் கட்ட திட்டம்

Print PDF

தினகரன் 20.07.2010

பிரப் ரோட்டில் நெரிசல் குறைக்க ரூ.24 லட்சத்தில் நடைபாதை மேம்பாலம் கட்ட திட்டம்

ஈரோடு, ஜூலை 20:ஈரோடு பிரப் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பிரப் ரோட்டில் மக்கள் சாலையை கடந்து செல்வதற்கு கூட மிகவும் சிரமப்படுகின்றனர். இச்சாலையில் செங்குந்தர் நர்சரி, செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கலைமகள் கல்வி நிலையத்தில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இப்பகுதியிலுள்ள மருத்துவமனைகள், வணிக வளாகங்களுக்கு நடந்து செல்பவர்களும் சாலையை கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் மூலம் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இருப்பினும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பிரப் ரோட்டில் சவீதா மருத்துவமனை சந்திப்பு அருகே இரும்பால் ஆன நடைபாதை மேம்பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று ஈரோடு பிரப் ரோட்டில் நடைபாதை மேம்பாலம் கட்ட ரூ.24 லட்சம் செல வாகும் என மாநகராட்சி நிர்வாகம் மூலம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. நடை பாதை மேம்பாலம் கட்ட எம்எல்ஏ என்கேகே.பி.ராஜா சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.18.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மீதமுள்ள தொகையை மாநகராட்சியின் பொதுநிதியிலிருந்து பெற்று நடைபாதை மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று பிரப் ரோட்டில் நடைபாதை இரும்பு மேம்பாலம் கட்டும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை எம்எல்ஏ என்கேகே.பி.ராஜா ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு அவர் கூறியதாவது: பிரப் ரோட்டில் செங்குநர் நர்சரி பள்ளிக்கு அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து கலைமகள் கல்வி நிலையத்தை இணைக் கும் வகையில் நடைபெற உள்ள இந்த இரும்பு மேம் பாலம் கட்டும் பணியில் 6 மீட்டர் உயரத்தில் 2 மீட்டர் அகலத்தில் 40 படிக்கட்டுகள் வீதம் வைத்து கட்டப்பட உள்ளது. இந்த பணியை 3 மாதங்களில் துவங்கி விரை வில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆய்வின் போது துணை மேயர் பாபு என்கிற வெங்கடாசலம், ஆணை யாளர் பாலச்சந்திரன், மாநகராட்சி பொறி யாளர் வடிவேல், கவுன்சிலர்கள் மதன்மோகன், பாத்தி மா, ராதாமணிபாரதி உட்பட பலர் உடன் இருந்தனர்.

 


Page 161 of 238