Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பக்கிள் ஓடை சீரமைப்பு இரண்டாம் கட்ட பணி தீவிரம்

Print PDF

தினமலர் 17.06.2010

பக்கிள் ஓடை சீரமைப்பு இரண்டாம் கட்ட பணி தீவிரம்

தூத்துக்குடி : 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ள தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பக்கிள் ஓடை சீரமைப்பு பணியின் முதல் கட்ட பணிகள் திரேஸ்புரத்தில் இருந்து இரண்டாம் கேட் அழகேசபுரம் பாலம் வரை 1.85 கிலோ மீட்டர் தூரம் 6 கோடியே 85 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு துணை முதல்வர் ஸ்டாலினால் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பணிகள் அழகேசபுரம் பாலம் முதல் அண்ணாநகர் 6வது தெரு வரை 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மொத்தம் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது. கால்வாயின் இருபுறமும் உள்பகுதி முழுவதும் சிமெண்ட் கான்கீரிட் தளம் போட்டு கழிவு நீர் சீராக எந்தவித தேக்கமும் இல்லாமல் செல்லும் வகையில் அமைக்கபடவுள்ளது. இந்த இரண்டாம் கட்ட பணிக்கான பூமி பூஜை கடந்த மாதம் 29ம் தேதி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது. இதற்கு அடுத்து இந்த மாதம் 4ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணிகள் நடக்கவுள்ள பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது. மொத்தம் 150 ஆக்கிரமிப்புகள் வரையிலும் அகற்றப்பட்டது. வீடுகள், கடைகள், கோயில்கள், பெரிய கட்டடங்கள் போன்றவை இதில் அடங்கும். ஆக்ரமிப்பு அகற்றும் பணிகள் நிறைவு பெற்றதில் இருந்து பக்கிள் ஓடை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பிலிருந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஜேசிபி., மற்றும் பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாயில் உள்ள கழிவுகள் அகற்றப்படுவதோடு, ஆழமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கழிவுகள் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் கான்கீரிட் தளம் போடும் பணி தற்போது நடந்து வருகிறது. இது தவிர ஓடையின் இருபுற சுவர் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

 

தங்கசாலை சந்திப்பில் ரூ.23 கோடியில் மேம்பால பணி

Print PDF

தினகரன் 16.06.2010

தங்கசாலை சந்திப்பில் ரூ.23 கோடியில் மேம்பால பணி

சென்னை, ஜூன் 16: மாநகராட்சி சார்பில் தங்கசாலை சந்திப்பில் மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்த பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தங்க சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும் என்று 2007&2008ம் ஆண்டு மானியக்கோரிக்கையின் போது, பேரவையில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்தார். இந்த பகுதியில் உள்ள மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ் தங்களுடைய நிலத்தை தர இயலாது என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு சொந்தமான நிலத்தை தவிர்த்து மேம்பாலம் அமைக்க புதிய வரைபடம் தெரிவு செய்யப்பட்டது. அதன்படி, பழைய சிறைச்சாலை சாலையில் உள்ள பொதுப்பணி, காவல், மருத்துவத் துறைகளுக்கு சொந்தமான 16 மனை 368 சதுர அடி நிலம் மேம்பாலம் கட்டுவதற்காக பெறப்பட்டது.

இதற்கிடையே, மாநகராட்சி நிலத்தில் குத்தகைக்கு இருந்த 35 மரக்கடை வியாபாரிகளில் 7 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் மரக்கடைகள் அகற்றப்பட்டு ரூ.40 கோடி மதிப்புள்ள 22.5 மனை நிலம் மீட்கப்பட்டது.

இந்த மேம்பாலம் ரூ.23 கோடி செலவில் கட்ட, கடந்த ஜூலையில் அரசு அனுமதி பெறப்பட்டது. மேலும், காலதாமதத்தை தவிர்க்க புதிய வரைபடத்தின்படி வடிவமைப்பு, பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டமைப்பு முறையில் மேம்பாலம் அமைப்பதற்கான தீர்மானம் கடந்த மாதம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 4ம் தேதி ஒப்பந்ததாருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, இன்று பணி தொடங்கப்படுகிறது. 520 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படும் மேம்பாலம் இரு வழிப்பாதையாகும். 18 மாதத்தில் இந்த பணி முடிக்கப்பட்டு திறக்கப்படும். இதன்மூலம் தங்கசாலை, பேசின் பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியூர் செல்லும் கனரக வாகன போக்குவரத்துக்கு இந்த மேம்பாலம் பெரிதும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு மேயர் பேசினார்.

 

புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா; வடசென்னை வளர்ச்சி பெறும்: மேயர் பெருமிதம்

Print PDF

தினமலர் 16.06.2010

புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா; வடசென்னை வளர்ச்சி பெறும்: மேயர் பெருமிதம்

தங்க சாலை : தென்சென்னை, மத்திய சென்னையை விட போக்குவரத்து வசதியை எளிதாக்கும் வகையில், வடசென்னையில் புதிய மேம்பாலங்கள் அமையுமென மேயர் தெரிவித்தார்.சென்னை தங்க சாலையில் 23 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: வடசென்னையின் தங்க சாலை பகுதியில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றும் வகையில், புதிய மேம்பாலம் கட்ட கடந்த 2007-2008ம் ஆண்டு துணை முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.அதன்படி மேம்பாலம் கட்டும் பணிக்காக சென்னை மாநகராட்சி நிலத் தில் குத்தகைக்கு இருந்த மரக்கடைகள், கடந்த சில மாதங்களுக்கு முன் சட்ட ரீதியாக அகற்றப்பட்டன.அதன் மூலம் 40 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. இதையடுத்து, இன்று புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள் ளது. 520 மீட்டர் நீளத்தில், 15 மீட்டர் அகலம் கொண்ட இருவழிப் பாதை போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் இப்புதிய பாலம் அமையும்.

இதனால், தங்க சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும்.சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கும், துறைமுகத்திலிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கும் இப்பாலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதை, 18 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், மக்களின் போக்குவரத்து வசதிக்காக திட்டமிட்டதற்கு சில மாதங்கள் முன்பாக கட்டிக் கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளோம்.வடசென்னையில் ஸ்டான்லி மருத்துவமனை சுரங்கப்பாதை விரைவில் திறக்கப்படும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வியாசர்பாடி மேம்பாலப் பணிகளும் துவக்கப்பட்டுள்ளன. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பாலப்பணிகள் முடிந்து வடசென்னை போக்குவரத்து பிரச்னைகள் தீர்க்கப்படும்.அதன் மூலம் தென்சென்னை, மத்திய சென்னையை விட போக்குவரத்து வசதியில் வடசென்னை நல்ல வளர்ச்சி பெறும். இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார்.விழாவில் இணை ஆணையர் (பணிகள்) ஆஷிஷ் சட்டர்ஜி, வி.எல்.பாபு எம்.எல்..,துணை மேயர் சத்யபாமா, மாநகராட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 165 of 238