தினமலர் 25.05.2010
உள்ளாட்சிகளில் கட்டமைப்பு வசதி: கணக்கெடுக்க உத்தரவு
விருதுநகர் : உள்ளாட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த புள்ளியியல் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைந்துள்ளதா, இன்னும் தேவையான வசதிகள் எது என முழுமையாக கிராம ஊராட்சிகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்டங்களில் ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் தனி எண் வழங்கப்பட்டு உள்ளது. அதில் எந்த எண்ணை அதிகாரிகள் தேர்வு செய்கின்றனரோ, அந்த கிராமத்தில் புள்ளியியல் துறையினர் முழுமையாக தகவல்கள் சேகரித்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிராமங்களில் புள்ளியியல் துறையினரும், பேரூராட்சி, நகராட்சிப்பகுதிகளில் வளர்ச்சித்துறையினரும் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர