Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சென்ட்ரல் மார்க்கெட் தரைக்கடை ஒதுக்கீடு: ஆணையர் ஆய்வு

Print PDF

தினமணி       14.05.2010

சென்ட்ரல் மார்க்கெட் தரைக்கடை ஒதுக்கீடு: ஆணையர் ஆய்வு

மதுரை, மே 13: மதுரை மாநகராட்சி சென்டரல் மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு தரைக்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அதன் உண்மைத் தன்மை குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டதாக எஸ்.செபாஸ்டின் தகவல் தெரிவித்தார்.

மதுரை சென்ட்ரல் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த மாதம் மாட்டுத்தாவணி பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்து வரும் ஜூன் மாதம் மத்திய அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள நிரந்தரக்கடைகள் மற்றும் தரைக்கடைகள் ஆகியவற்றுக்குப் புதிதாக கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கு 14 தரைக்கடைகளைச் சேர்ந்த சங்கங்கள் 1259 கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மனுக்கள் வந்துள்ளன.

குறிப்பிட்ட மனுக்களை மாநகராட்சி உதவி ஆணையர் எஸ்.பி.ராஜகாந்தி, நிர்வாகப் பொறியாளர் சந்திரசேகரன் உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஒவ்வொரு கடையாகச் சென்று கடையின் உரிமையாளர் பெயர் மற்றும் அவரது புகைப்படம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

இந்த விசாரணை அûனைத்து தரைக்கடைகளிலும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் மனுச் செய்தவர்களுக்கு தரைக் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார்.

 

மாசானியம்மன் கோவில் பக்தர்களுக்கு ரூ.1.80 கோடி செலவில் தங்கும் அறை : ஆனைமலை பேரூராட்சி திட்டம்

Print PDF
தினமலர்      14.05.2010

மாசானியம்மன் கோவில் பக்தர்களுக்கு ரூ.1.80 கோடி செலவில் தங்கும் அறை : ஆனைமலை பேரூராட்சி திட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 1.80 கோடி ரூபாய் செலவில் தங்கும் அறைகள் மற்றும் வணிக வளாகங்கம் கட்டப்படுகிறது.

ஆனைமலை பேரூராட்சி தலைவர் அசோக் சண்முகசுந்தரம் கூறியதாவது: மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக, 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், போலீஸ் ஸ்டேஷன் வீதியில் 20 தங்கும் அறைகளும், 36 கடைகளும் கட்டப்படுகின்றன. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்திடம் 30 சதவீத மானியத்துடன், நிதியுதவி பெறப்படும். இதன் மூலம் பக்தர்களுக்கு வசதி ஏற்படுவதுடன், பேரூராட்சிக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.' இவ்வாறு, பேரூராட்சி தலைவர் தெரிவித்தார். செயல் அலுவலர் செல்வராஜ், துணைத்தலைவர் ஜாபர் அலி உட்பட பலர் உடனிருந்தனர்.

 

ஜூன் 5-ல் புதிய சென்ட்ரல் மார்க்கெட் திறப்பு

Print PDF

தினமணி    12.05.2010

ஜூன் 5-ல் புதிய சென்ட்ரல் மார்க்கெட் திறப்பு

மதுரை, மே 11: மதுரை மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள புதிய சென்ட்ரல் மார்க்கெட் அடுத்த மாதம் (ஜூன்) 5-ம் தேதி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு..அழகிரியால் திறக்கப்படவுள்ளதாக மாநகராட்சி கமிஷனó எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

புதிய மார்க்கெட் கட்டுமானப் பணிகளை கமிஷனர் செபாஸ்டின் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முயற்சியால் அடிக்கல் நாட்டப்பட்ட மார்க்கெட் பணிகள் தற்போது முடியும்நிலையில் உள்ளது. இதில் 542 நிரந்தரக் கடைகள், 1000-க்கும் மேற்பட்ட தாற்காலிகக் கடைகள் ரூ.12 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் பழைய சென்ட்ரல் மார்óக்கெட்டில் நிரந்தரமாக கடை வைத்துள்ள 524 நிரந்தரக் கடைக்காரர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாற்காலிகமாக வைத்துள்ளவர்களின் பட்டியல் பெறப்பட்டு மாநகராட்சிப் பொறியாளர்கள் மூலம் உண்மையான கடைக்காரர்கள் கண்டறியப்பட்டபின் அவர்களுக்கே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அடுத்த மாதம் 5-ம் தேதி புதிய மார்க்கெட் திறக்கப்படவுள்ளது. பின்னர் பழைய மார்க்கெட் செயல்பட்டு வந்த இடத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்படும் என்றார் கமிஷனர் செபாஸ்டின். ஆய்வுப் பணியின்போது நிர்வாகபó பொறியாளர் எஸ்.சந்திரசேகரன், உதவிக் கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன், உதவி நிர்வாகப் பொறியாளர் குழந்தைவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 177 of 238