Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

வியாசர்பாடியில் மேம்பாலப் பணி விரைவில் தொடங்கும்: மேயர்

Print PDF

தினமணி 26.04.2010

வியாசர்பாடியில் மேம்பாலப் பணி விரைவில் தொடங்கும்: மேயர்

சென்னை, ஏப். 25: வியாசர்பாடியில் மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னையில் 2-வது வார்டு பயனாளிகளுக்கு இலவச கலர் டி.வி. வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு டி.வி.களை வழங்கிய மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:
சென்னை மாநகரில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 976 இலவச கலர் டி.வி.கள் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை 6 லட்சத்து 31 ஆயிரத்து 569 டி.வி.கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு இன்னும் ஒரு மாத காலத்தில் டி.வி. கிடைக்கும்.வடசென்னையில் ரூ. 24.80 கோடியில் கேப்டன் காட்டன் கால்வாய் மேம்படுத்தும் பணி, ரூ. 23.75 கோடியில் கொடுங்கையூர் கால்வாய் மேம்படுத்தும் பணி மற்றும் ரூ. 11.10 கோடியில் 39 தெருக்களில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.வியாசர்பாடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 60 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து கணேச புரத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கப்படும் என்றார்.

Last Updated on Monday, 26 April 2010 09:43
 

மதுரையில் 400 நவீன நிழற்குடைகள் வருவாயை பெருக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர் 26.04.2010

மதுரையில் 400 நவீன நிழற்குடைகள் வருவாயை பெருக்க மாநகராட்சி திட்டம்

மதுரை: நகர எல்லைக்குள் உள்ள 400 பஸ் நிழற்குடைகளை நவீனப்படுத்தி, வருவாயை பெருக்க மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மதுரையில் 400 நிழற்குடைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை, சேதம் அடைந்து, கூரை பெயர்ந்து காணப்படுகின்றன. சில நிழற்குடைகளில் சில நிறுவனங்கள் இஷ்டம்போல் விளம்பர பலகைகள் வைத்துள்ளன. இவை சரியாக கண்காணிக்கப்படுவதில்லை. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இதற்கிடையில் மதுரையில் 720 கி.மீ., நீளமுள்ள சாலைகள், விரைவில் உலகத்தரத்திற்கு மாற்றப்பட உள்ளன. அப்படி மாறும்பட்சத்தில் நிழற்குடைகளும் நவீனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது.இதையடுத்து, நிழற்குடைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது. தற்போது மதுரையில் திறக்கப்பட்டு உள்ள நவீன இலவச கழிப்பறைகளைப் போல, தனியார் நிறுவனங்களிடம் நிழற்குடைகள் ஒப்படைக்கப்படும். மாநகராட்சி கூறும் வரைபடத்தின்படி, நிறுவனங்களே இவற்றை கட்டி, பராமரித்துக் கொள்ள வேண்டும். இதற்கு மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாயை, கட்டணமாக மாநகராட்சிக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

Last Updated on Monday, 26 April 2010 07:13
 

பாதாள சாக்கடை பணிக்கு ரூ.45 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 23.04.2010

பாதாள சாக்கடை பணிக்கு ரூ.45 கோடி ஒதுக்கீடு

தேனி:தேனி நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. தேனியில் பாதாள சாக்கடை அமைக்கும் முன்னேற் பாட்டு பணிகள் ஓராண்டிற்கும் முன்பிருந்து நடந்து வந்தன. சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு இடம் தேர்வு செய்வதில் பிரச்னை எழுந்தது. தற்போது கருவேலநாயக்கன்பட்டியில் ஏழு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பாதாள சாக்கடை அமைக்க 36 கோடி ரூபாய் செல வாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தாமதம் காரணமாக இந்த மதிப்பீடு 45 கோடி ரூபா யாக உயர்ந்துள்ளது.உயர்த்தப்பட்ட மதிப்பீட்டிற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இப்பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Friday, 23 April 2010 07:00
 


Page 181 of 238