Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நாகர்கோவிலில் சுரங்க நடைபாதை திறப்பு : ஏராளமான மக்கள் உற்சாக பயணம்

Print PDF

தினமலர் 05.05.2010

நாகர்கோவிலில் சுரங்க நடைபாதை திறப்பு : ஏராளமான மக்கள் உற்சாக பயணம்

நாகர்கோவில் : குடிதண்ணீர் பிரச்னையை தீர்க்க 75 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என நாகர்கோவிலில் நடந்த சுரங்க நடைபாதை திறப்பு விழாவில் அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசினார்.

நாகர்கோவில் நகராட்சியில் சர்.சி.பி.ராமசாமி பூங்காவையும், அண்ணா பஸ் ஸ்டாண்டையும் இணைக்கும் வகையில் கேப் ரோட்டில் சுரங்கநடைபாதை அமைக்க 1 கோடி ரூபாயில் தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. சுரங்க நடைபாதை பணிக்கு 61.60 லட்சம் ரூபாயில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு 47.40 லட்சம் ரூபாயில் ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவன உரிமையாளர் பாலகிருஷ்ணன் ஒப்பந்தம் பெற்றார்.

சுரங்கநடைபாதை பணி தவிர நடைபாதைக்கு தேவையான நடைபாதை மின்மயமாக்கல், வர்ணம் பூசுதல், இரும்பு கம்பியிலான கதவுகள் அமைத்தல், வடிகால் அமைத்தல், கைப்பிடி கம்பிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டது.

சுரங்கநடைபாதை 21.50 மீட்டர் நீளத்தில் 5.40 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் கீழ் உள்ள பகுதி 2.70 மீட்டர் உயரமும், பஸ் ஸ்டாண்டில் உள்ள பகுதி 3.85 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதையின் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சி சார்பில் கடைகள் அமைக்கப்பட உள்ளது.

சுரங்கபாதையின் இருபக்கமும் 6.20 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதையின் அருகில் 5.30 மீட்டர் அகலத்தில் புதியதாக படிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சுரங்கபாதையின் படிகளில் எளிதாக ஏறி இறங்க கைப்பிடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. தடையின்றி மின்சாரம் கிடைக்க இன்வெர்ட் வைப்படுகிறது.

புதிய சுரங்க நடைபாதை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு நகராட்சி சேர்மன் அசோகன் சாலமன் தலைமை வகித்தார். கமிஷனர் ஜானகி ரவீந்திரன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு குத்துவிளக்கு ஏற்றினார். அமைச்சர் சுரேஷ்ராஜன் சுரங்க நடைபாதையை திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பழனியப்பன், ஹெலன்டேவிட்சன் எம்.பி., எம்.எல்..க்கள் ராஜன், ரெஜினால்டு, மாவட்ட பஞ்., சேர்மன் அஜிதா மனோதங்கராஜ், தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணை தலைவர் பெர்னார்டு, மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் ஷா, நகராட்சி துணை சேர்மன் சைமன்ராஜ், கவுன்சிலர் அலிபாத்திமா ரபீக் பேசினர்.

அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசும்போது கூறியதாவது: தமிழகத்திலேயே அதிக பாலம், சாலைகள் அமைந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். காமராஜர் ஆட்சிக்கு பின் பாலம் மற்றும் சாலைகள் அதிகமாக அமைக்கப்பட்டிருப்பது தி.மு.. ஆட்சியில்தான்.

கன்னியாகுமரி சட்டசபை தொகுதியை பொறுத்தவரை இனிமேல் பால வேலை இல்லை என்ற அளவிற்கு குறுகிய பாலங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பழைய பாலங்கள் மாற்றப்பட்டு புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தி.மு.. ஆட்சியில் குமரி மாவட்டத்திற்கு நான்கு மீன்பிடி துறைமுகங்கள், மாம்பழத்துறை ஆறு அணை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டங்களை முதல்வர் கருணாநிதி தனது கைகளால் திறந்து வைப்பார் என நம்புகிறோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் 36 கோடி ரூபாயில் 117 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறையில் 72 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில் 50 கோடி ரூபாயில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக்கை அருவி திட்டத்திற்காக நகராட்சி 25 லட்சம் ரூபாய் பொதுப்பணித்துறைக்கு கொடுத்துள்ளது. உலக்கை அருவி வனத்துறையின் கீழ் உள்ளதால். நிலம் கையகப்படுத்துவதில் விதிகளை கையாள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. விரைவில் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் நாகர்கோவில் நகராட்சி நீங்கலாக குடிதண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் 75 கோடி ரூபாயில் ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிதண்ணீர் பிரச்னை முற்றிலும் தீர்க்கப்படும்.

தமிழகத்தில் 9 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. அனைத்திலும் தி.மு.., காங்., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தி.மு.. அரசை விமர்சித்த எதிர்கட்சி பென்னாகரத்தில் டெபாசிட் இழந்தது போல் வரும் சட்டபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும். ஏனென்றால் அவர்கள் ஏழைமக்களின் பிரச்னைக்கு உதவி செய்யவில்லை. நாகர்கோவில் நகராட்சியில் குடிதண்ணீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசினார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். சுரங்க நடைபாதை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் உற்சாகமாக சுரங்க பாதையில் நடந்து சென்றனர்.

Last Updated on Monday, 05 April 2010 06:36
 

அத்தாணியில் புதிய பாலம் திறப்பு விழா

Print PDF

தினமலர் 05.05.2010

அத்தாணியில் புதிய பாலம் திறப்பு விழா

அந்தியூர்: அந்தியூரை அடுத்த அத்தாணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் திறப்பு விழா மற்றும் பவானியில் ரூ. 5.34 கோடியில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.கடந்த ஓராண்டுக்கு முன், அந்தியூரை அடுத்த அத்தாணியிலிருந்து கோபி செல்லும் வழியில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே ரூ. 4.48 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணி துவங்கியது. தற்போது நிறைவுபெற்று நேற்று திறப்பு விழா நடந்தது.

நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலாஜி வரவேற்றார். அந்தியூர் எம்.எல்.., குருசாமி முன்னிலை வகித்தார். அந்தியூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடாச்சலம், பவானி ஒன்றியக்குழு தலைவர் நல்லசிவம் ஆகியோர் பேசினர். ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், புதிய பாலத்தை திறந்து வைத்தார். மற்றொரு புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது: பவானி ஆற்றின் குறுக்கே தளவாய்பேட்டை வைரமங்கலம் இடையே ரூ. 5.34 கோடி மதிப்பில் கட்டப்படும் பாலத்தால், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்வது குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்த மூன்று ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற சாலைகளும் இரு வழி பாதையாக மாற்றப்படும்.

அத்தாணியிலிருந்து அந்தியூர் வரை சாலை அகலப்படுத்த உத்தரவு பெறப்பட்டுள்ளது. அம்மாபேட்டை வரையிலும் மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அந்தியூர் எம்.எல்.., குருசாமி, டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடாச்சலம் ஆகியோர், வரட்டுப்பள்ளத்திலிருந்து பர்கூர் வழியாக கர்கேகண்டி வரை உள்ள சாலையை இரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். பவானிசாகர் எம். எல். ., சுப்பிரமணியம், அத்தாணி டவுன் பஞ்சாயத்து தலைவர் செந்தில்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 05 April 2010 06:29
 

ரூ.20 லட்சத்தில் நந்தம்பாக்கம் பேரூராட்சி அலுவலக கட்டடம்

Print PDF

தினமலர் 05.05.2010

ரூ.20 லட்சத்தில் நந்தம்பாக்கம் பேரூராட்சி அலுவலக கட்டடம்

நந்தம்பாக்கம் : நந்தம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்திற்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில் இப்பணிகள் நிறைவடைய உள்ளன.

நந்தம்பாக்கம் பேரூராட்சிக்கு சொந்தமான ஐந்து கிரவுண்டு இடத்தில் தற்போது பேரூராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. போதிய அறை வசதி இல்லாமல், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டடத்தில் அலுவலகம் இயங்கி வருவதால், ஊழியர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடக்கும் அரங்கு, மேல்கூரை உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதையடுத்து, நந்தம்பாக்கம் பேரூராட்சிக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடம் கட்ட நிர்வாகம் முடிவு செய்தது. தரைதளம் 2,000 சதுர அடியிலும், முதல் தளம் 1,000 சதுர அடியிலும் கட்டப்பட உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியுள்ளன.

இது குறித்து பேரூராட்சி தலைவர் சேகர் கூறுகையில், 'நந்தம்பாக்கம் பேரூராட்சி அலுவலக கட்டடம் அடுத்த மூன்று மாதங்களில் புதுப்பொலிவுடன் தயாராகும். பேரூராட்சியின் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில், கூடுதல் நீரை சேமிக்க 18 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மேற்கு குளக்கரை தெருவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் ஓரிரு வாரங்களில் முடிய உள்ளதால், கோடையில் சீரான குடிநீர் வினியோகம் இருக்கும்' என்றார்.

Last Updated on Monday, 05 April 2010 06:11
 


Page 188 of 238