Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வீடு கட்ட அனுமதி இல்லை

Print PDF

தினமணி 27.03.2010

அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வீடு கட்ட அனுமதி இல்லை

ஒசூர், மார்ச் 26: ஒசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் அங்கீகரிப்படாத லே-அவுட் பகுதிகளில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க இயலாது என தமிழக நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் தெரிவித்தார்.

ஒசூர் புதுநகர் வளர்ச்சிக் குழும அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

ஒசூர் புதுநகர் வளர்ச்சி குழு அலுவலகத்தில் விண்ணபித்த 30 நாள்களுக்குள் லே-அவுட் ஒப்புதல் மற்றும் கட்டுமானத் திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கப்படும்.

ரூ.2 கோடி நிதியில் ஒசூர் ராமநாயக்கன் ஏரி தூர்வாரி, பூங்கா அமைக்கப்படும். ஆலவப்பள்ளி, என்.ஜி.. காலனியில் பூங்கா ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றார். ஒசூர் ராஜகால்வாயை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஒசூர் நகரமன்றத் தலைவர் எஸ்..சத்யா மனு அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வே..சண்முகம், ஒசூர் நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம், மத்திகிரி பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Saturday, 27 March 2010 07:29
 

மாநகராட்சி வார்டுகளை பிரிக்க விரைவில் குழு

Print PDF

தினமலர் 27.03.2010

மாநகராட்சி வார்டுகளை பிரிக்க விரைவில் குழு

வேலூர்'வேலூர் மாநகராட்சி புதிய எல்லைகளின்படி வார்டுகளை பிரிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.வேலூர் மாநகராட்சியின் புதிய எல்லைகளை சமீபத்தில் அரசு அறிவித்தது. இதன்படி 3 நகராட்சிகள், 3 மூன்றாம் நிலை நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 61 பஞ்சாயத்துக்கள் சேர்த்து வரும் 2011ம் ஆண்டு முதல் விரிவுப்படுத்தப்பட்ட புதிய மாநகராட்சி செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.மாநகராட்சியை 72 வார்டுகளாக பிரித்து, நிர்வாக வசதிக்காக 4 மண்டல அலுவலகங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.புதிய எல்லைகள் பிரிப்பது குறித்து நகராட்சிகள் கூடுதல் இயக்குனர் சந்திரசேகர் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், வார்டுகள் பிரிக்கும்போது அதிகாரிகள் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுந்தப்பட்டுள்ளது. எல்லை பிரிப்பதற்காக நகராட்சி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், உள்ளாட்சி சார்பில் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.புதிய குழுக்கள் அமைத்தவுடன் வார்டுகள் பிரிப்பது குறித்து முடிவு செய்ய ஏப். 6ம் தேதி சிறப்பு நகராட்சிகள் மண்டல இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வார்டுகள் பிரிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Last Updated on Saturday, 27 March 2010 06:01
 

பாகோடு பேரூராட்சியில் படித்துறை திறப்பு

Print PDF

தினமணி 26.03.2010

பாகோடு பேரூராட்சியில் படித்துறை திறப்பு

மார்த்தாண்டம், மார்ச் 25: பாகோடு பேரூராட்சியில் விளசேரி பாறைக்கோயில் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் படித்துறை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருவட்டார் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.5 லட்சம் ஒதுக்கப்பட்டு இந்த பணி நடைபெற்றது. திறப்பு விழாவில் திருவட்டார் எம்.எல்.. லீமாரோஸ் கலந்து கொண்டு படித்துறையை திறந்துவைத்தார். விழாவில் பாகோடு பேரூராட்சித் தலைவர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி உறுப்பினர்கள் கேதரின் எஸ்தர் டானி, பால்ராஜ், எட்வின் ஐசக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 26 March 2010 06:42
 


Page 192 of 238