Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ஆடுதுறை பேரூராட்சியில் புதிய கட்டிடங்கள் திறப்பு

Print PDF

தினமலர் 17.02.2010

ஆடுதுறை பேரூராட்சியில் புதிய கட்டிடங்கள் திறப்பு

ஆடுதுறை : ஆடுதுறை பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

திருவிடைமருதூர் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தமிமுனிசா, குறு குழந்தைகள் மைய செயல்பாடுகள் குறித்து விளக்கினார். திருவிடைமருதூர் ஒன்றிய ஆணையர் பிரேமாவதி, ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்குமார், சுந்தரஜெயபால் ஆகியோர் பேசினர்.தொடர்ந்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்து அமைச்சர் கோ.சி.மணி பேசியதாவது: ஆடுதுறை பேரூராட்சி கடந்த காலங்களிலும் அரசின் பல்வேறு திட்டங்கள் நகராட்சிக்கு இணையான வகையில் பல கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பேரூராட்சி வீரசோழன் திருமண மண்டபம், அனைத்து வசதிகளோடு கூடிய பஸ் ஸ்டாண்டு, உயர் கோபுர மின்விளக்கு உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆடுதுறை கடைவீதியில் உயர்கோபுர மின்விளக்கில் 4 பல்புகள் எரியவில்லை. இதனை அதிகாரிகள் உடன் நிவர்த்தி செய்ய வேண்டும். இதேபோல் பிரச்னைகளை மக்களும், தாங்கள் கண்டவுடன் அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கோ.சி.மணி பேசினார். பேரூராட்சித் தலைவர் மகேஸ்வரி வரவேற்றார். கவுன்சிலர் சரவணகுமார் நன்றி கூறினார்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:35
 

நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகம் ஏப்ரலில் கட்டி முடிக்கப்படும்: மேயர்

Print PDF

தினமணி 12.02.2010

நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகம் ஏப்ரலில் கட்டி முடிக்கப்படும்: மேயர்

தியாகராயநகர் பாண்டிபஜாரில் நடைபாதை வியாபாரிகளுக்காக மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி வணிக வளாகம்.

சென்னை, பிப். 11: நடைபாதை வியாபாரிகளுக்காக சென்னை தியாகராய நகரில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வணிக வளாகம் ஏப்ரல் மாதம் கட்டி முடிக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

சென்னையில் நடைபாதை வியாபாரிகளுக்காக, மாநகராட்சி சார்பில் ரூ. 5.78 கோடி செலவில் 3 இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தியாகராய நகர் பாண்டிபஜாரில் ரூ. 4.30 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வணிக வளாகத்தை மேயர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது: தியாகராயர் சாலை, உஸ்மான் சாலை, சிவபிரகாசம் சாலை, பனகல் பூங்காவைச் சுற்றியுள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக, பாண்டிபஜாரில் இந்த அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 692 வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 லிப்ட், 72 கழிவறைகள் அமைக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதத்துக்குள் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும்.

அயனாவரம் பாலவாயல் மார்க்கெட் சாலை நடைபாதை வியாபாரிகளுக்காக, அதே பகுதியில் ரூ. 1.23 கோடியில், 32 கழிவறைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும். இதில் 332 வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்படும். இதுபோல் வடசென்னையில் எம்.சி.சாலை சுழல்மெத்தை அருகில் இருந்த நடைபாதை வியாபாரிகளுக்காக அதே பகுதியில் ரூ. 25 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 125 கடைகள் இருக்கும். இந்தக் கட்டடப் பணி முடியும் தருவாயில் உள்ளது என்றார் அவர்.

Last Updated on Friday, 12 February 2010 11:44
 

கிருஷ்ணகிரியில் இரு ஊட்டச்சத்து மையங்கள் திறப்பு

Print PDF

தினமணி 11.02.2010

கிருஷ்ணகிரியில் இரு ஊட்டச்சத்து மையங்கள் திறப்பு

கிருஷ்ணகிரி, பிப்.10: கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் 2 ஊட்டச்சத்து மையங்களை நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் புதன்கிழமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சத்துருண்டைகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் 3-வது வார்டு பகுதியில் ஊட்டச்சத்து மையங்கள் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி வந்தனர். அவர்களின் கோரிகையை ஏற்று நகராட்சிக்கு உள்பட்ட காவா மேடு, பெங்காலி தெரு ஆகிய பகுதிகளில் ஊட்டச்சத்து மையங்களை தொடங்கப்பட்டன.

நகராட்சிப் பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பாளர் கோகிலகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 11 February 2010 11:25
 


Page 206 of 238