Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாட்டுத்தாவணியில் அமைய உள்ள புதிய சென்ட்ரல் மார்க்கெட் இம்மாத இறுதியில் தயாராகும்

Print PDF

தினகரன் 04.02.2010

மாட்டுத்தாவணியில் அமைய உள்ள புதிய சென்ட்ரல் மார்க்கெட் இம்மாத இறுதியில் தயாராகும்

மதுரை : மதுரை மாட்டுத் தாவணியில் புதிதாக அமை யும் சென்ட்ரல் மார்க்கெட் இம்மாத இறுதியில் தயாராகி விடும். தற்போதுள்ள மார்க்கெட் காலியானதும் அந்த இடத்தில் நவீன வடி விலான வாகன நிறுத்துமிடம் உருவாகிறது.

மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழி, ஆணை யாளர் செபாஸ்டின் நிருபர்களிடம் கூறியதாவது:

மதுரை மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டு வரும் புதிய சென்ட்ரல் மார்க்கெட் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு தயாராகிவிடும். மார்க்கெட் டின் உள்பகுதியில் சாலை மற்றும் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மார்க்கெட்டின் நுழைவாயில் லேக்ரோடு பகுதியில் அமைக்கப்படுகிறது. இதனால், மேலூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது. புதிய மார்க்கெட் கடைகளுக்கு மாநகராட்சி குறைத்து நிர்ணயித்துள்ள தொகை செலுத்த வியாபாரிகள் பெரும்பாலும் ஒப்புதல் அளித்துவிட்டனர்.

மத்திய அமைச்சர் மு..அழகிரியின் ஏற்பாட்டின்படி 11 இடங்களில் டெல்லியைப் போல இலவச நவீனக் கழிப்பிடங்கள் திறந்துவைக்கப்பட்டன. அதன் செயல்பாட்டை நேரில் சென்று ஆய்வு செய்வோம். இந்தக் கழிப்பறைகளுக்குப் பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. பஸ் நிலையத்தில் உள்ள நவீன கழிப்பிடங்கள் 24 மணி நேரமும் செயல்படும். மற்ற இடங்களில் உள்ள கழிப்பிடங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

ஆம்னி பஸ்களை மாட்டுத் தாவணிக்கு மாற்றும் திட்டம் பரிசீலிக்கப்படும். மதுரை நகரைக் குடிசை இல்லாத நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசின் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 22 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதில் இதுவரை நகர்ப்புறப் பகுதிகளில் பட்டா உள்ள அல்லது அரசுப் புறம்போக்கு இடங்களில் இருக்கும் குடிசைகளை மாற்றி காங்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பட்டா உள்ள குடிசை களை மாற்றி கட்டிக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Last Updated on Thursday, 04 February 2010 07:46
 

சமுதாய கூடம், ரேஷன் கடை கட்ட ரூ.21 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 02.02.2010

சமுதாய கூடம், ரேஷன் கடை கட்ட ரூ.21 லட்சம் ஒதுக்கீடு

திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் நான்கு இடங்களில் எம்.எல்.., தொகுதி வளர்ச்சி நிதியில் 21 லட்சம் செலவில் புதிதாக அங்கான்வாடி மையம், சமுதாய கூடம், ரேஷன் கடை கட்ட, நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

வேலம்பாளையம் நகராட்சி 14வது வார்டில் சிறுபூலுவப்பட்டி அருகே வ..சி., நகரில் 17 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடம்; இதில், 13 லட்சம் ரூபாய் எம்.எல்.., தொகுதி வளர்ச்சி நிதியும், நகராட்சி சார்பில் நான்கு லட்சம் நிதியும் அடங்கும். 15வது வார்டு ரங்கநாதபுரம் பகுதியில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கான்வாடி மையம்; 19வது வார்டில் ஆசிரியர் குடியிருப்பு பின்புறம் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கான்வாடி மையம்; எட்டாவது வார்டு பெரியார் காலனியில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை என 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு, எம்.எல்.., கோவிந்தசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டார்.

பின் அவர் கூறுகையில், ""புதிதாக கட்டப்படும் நகராட்சி கட்டடத்தின் முழு தோற்றமும் தெரியும் வகையில், ரோட்டின் முன்புறம் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். மெயின் ரோட்டில் இருந்து பார்க்கும் போது, கட்டடம் "பளீச்' என தெரியும் வகையில் முன்புறம் உள்ள கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்,'' என்றார். நகராட்சி தலைவர் மணி, செயல் அலுவலர் குற்றாலிங்கம், செயற்பொறியாளர் மல்லிகை உட்பட பலர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:27
 

லிப்ட் வசதியுடன் நடை மேம்பாலம்

Print PDF

தினகரன் 01.02.2010

லிப்ட் வசதியுடன் நடை மேம்பாலம்

சென்னை : சைதாப் பேட்டை, புதிய தலைமைச் செயலகத்தை ஒட்டிய வாலாஜா சாலையில் லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரி வித்தார்.

நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில், இந்தியாவிலேயே முதன் முதலாக மாநகராட்சி சார்பில் ரூ.60.88 லட்சம் செலவில் லிப்ட் வசதியுடன் அமைக்கப் பட்ட நடை மேம்பாலத்தை, துணை முதல்வர் மு..ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். லிப்ட் மூலம் நடைமேம்பாலத்தில் சென்று பார்வையிட்டார். அவருடன் மேயர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் சத்யபாமா, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, மண்டலக் குழு தலைவர் அன்புதுரை, கவுன்சிலர் கணேசன், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் சென்றனர்.

பின்னர், ஸ்டெர்லிங் அவென்யூ மற்றும் அடையாறு சர்தார் படேல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைச் சிற்பங்களையும் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம் பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. சாலையை மக்கள் எளிதாக கடந்து செல்வதற்காக ரூ.60 லட்சத்து 88 ஆயிரம் செலவில் இரண்டு லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டையில் ரூ.94 லட்சத்தில் லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம் கட்டப்படுகிறது. புதிய தலை மைச் செயலகம் கட்டப்படும் பகுதியில் உள்ள வாலாஜா சாலையில் லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லிப்ட் வசதியின் பயன்பாட்டை கவனித்து, சென்னை மாநகரில் மேலும் பல இடங்களில் நடை மேம்பாலங்களுக்கு லிப்ட் வசதி செய்யப்படும்.

சிலம்பாட்டம், கரகாட் டம், பொய்க்கால் குதிரை, களரி சிற்பம், மரப் பதுமை போன்ற தமிழர்களின் நாகரிக கலாசாரங்களை பிரதிபலிக் கும் சிற்பங்கள், கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் செலவில் 5 இடங் களில் வைக்கப்பட்டது. ஸ்டெர்லிங் அவென்யூவில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும், அடையாறு சர்தார் படேல் சாலையில் புலி ஆட்டம் கலை சிற்பம் ரூ.3 லட்சத்திலும் இன்று திறந்து வைத்துள்ளேன்.

பெரம்பூர் மேம்பால பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. தற்போது அங்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் மேம்பாலத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார். இவ்வாறு துணை முதல்வர் மு..ஸ்டாலின் கூறினார்.

Last Updated on Monday, 01 February 2010 10:09
 


Page 208 of 238