Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

திருவத்திபுரம் புதிய நகராட்சி அலுவலகம் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினமணி              31.12.2013

திருவத்திபுரம் புதிய நகராட்சி அலுவலகம் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தினை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

 திருவத்திபுரம் நகராட்சி அலுவலகக் கட்டடம் போதிய இட வசதி இல்லாமல் இருந்து வந்ததால், ரூ.99.90 லட்சம் மானியம் பெறப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்து வந்தது.

 இதனை திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நகராட்சி அலுலகத்தில் திருவத்திபுரம் நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன், துணைத் தலைவர் கே.எஸ்.செல்வராஜு, நகர்மன்ற உறுப்பினர்கள் விநாயகம், கே.வி.வெங்கட்ராமன், பி.எஸ்.ஏகாம்பரம், கே.செந்தில், ஆர்.முருகன், ஜெ.ரமணமுருகன், சரஸ்வதி, எ.ஊஷாராணி, ஆயிஷாபீ, எ.பவானி, கே.செல்வதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 விழாவுக்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் சிவானந்தகுமார், துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணி, துப்புரவு ஆய்வாளர் மதனராசன் மற்றும் பணியாளர்களும் செய்து இருந்தனர்.

 

புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரை மேடையை உடனடியாகப் பயன்படுத்தலாம்

Print PDF

தினமணி              31.12.2013

புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரை மேடையை உடனடியாகப் பயன்படுத்தலாம்

வேலூர் பெங்களூர் சாலையில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தரைமேடையை மீன் வியாபாரிகள் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார்.

வேலூர் ஆபிஸர்ஸ் லைனில் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மீன்மார்க்கெட்டுக்கு பதிலாக, பெங்களூர் சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்மார்க்கெட் வளாகத்தை மாநகராட்சி நிறுவியது. இதில் ஷட்டர் போடப்பட்ட கடைகள், தரை மேடை கடைகள் உள்பட 110 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்துக்கு வருவதற்கு பழைய மீன் மார்க்கெட் வியாபாரிகள் உடன்படவில்லை. இதனால் பழைய மீன் மார்க்கெட்டை 30ஆம் தேதியுடன் மூடுவதாக மாநகராட்சி அறிவித்தது.

இரு தரப்பினருக்கும் பிரச்னை நிலவியதையடுத்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஜனவரி 8ஆம் தேதிக்குள் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தை காலி செய்ய கால அவகாசம் அளித்தது.

 வியாபாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட ஒருசில கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் புதிய மீன் மார்க்கெட்டை பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை கொண்டு வந்தது. ஆனாலும் வியாபாரிகள் எவரும் இந்த வளாகத்தை திங்கள்கிழமை பயன்படுத்தவில்லை.

இதுதொடர்பாக ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் கேட்டபோது, வியாபாரிகள் ஷட்டர் போடப்பட்ட கடைகளுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். தரை மேடை கடைகளை உடனடியாக அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார்.

 

அவிநாசி பேரூராட்சி கட்டடம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு

Print PDF

தினமணி              31.12.2013

அவிநாசி பேரூராட்சி கட்டடம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு

அவிநாசி பேரூராட்சி அலுவலக புதிய கட்டடத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

அவிநாசி பேரூராட்சி அலுவலகக் கட்டடம் ரூ. 1 கோடியே 34 லட்சம் மதிப்பில் அவிநாசி சேவூர் சாலையில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டது. இப் புதிய அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து அலுவலகப் பணிகளை அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்புசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் கு.கோவிந்தராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பேரூராட்சித் தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் பி.மணிச்சாமி, துணைத் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி,  பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கலைவாணன், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், துணைத் தலைவர் ஆனந்தகுமார், அதிமுக ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், அவிநாசிதொகுதி கழகச் செயலாளர் சேவூர்.ஜி.வேலுசாமி, வார்டு கவுன்சிலர்கள உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 27 of 238