Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நல்லூர் பகுதியில் ஆய்வு அவசியம்

Print PDF

தினமலர் 06.05.2010

நல்லூர் பகுதியில் ஆய்வு அவசியம்

திருப்பூர் : நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற் றும் ஓட்டல்களில் ஆய்வு நடத்த, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

காலாவதியான மருந்துகள் மற்றும் உணவு பண்டங்களின் பிரச்னை, தமிழகம் முழு வதும் உள்ளது. திருப்பூரில் சுகாதாரத் துறையினர், மாநகராட்சி யோடு இணைந்து நேற்று பல மளிகை கடைகளில் ஆய்வு நடத்தினர். நல்லூர் நகராட்சியில் 11 ஆயிரம் குடும்பங் கள் வசிக்கின்றன. நக ராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் 500க் கும் மேற்பட்ட ஓட்டல் கள், பேக்கரிகள், மருந்து கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாலை நேரங்களில் ரோட் டோர கடைகளும் முளைக்கின்றன.

திருப்பூருக்கு அடுத்த படியாக அதிகளவி லான நிறுவனங்கள் செயல்படுகின்றன; பல ஆயிரம் தொழிலாளர் கள் தங்கியுள்ளனர். இவர்களது அன்றாட வாழ்வாதாரம், கடை களையும், ஓட்டல் களையும் சார்ந்திருக் கின்றன. இக்கடைகளில் வினி யோகிக்கப்படும் உணவு, சுகாதாரமாக இருப்பதில்லை. எனவே, நல்லூர் நக ராட்சி பகுதியிலும் சுகா தாரத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Thursday, 06 May 2010 06:52