Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாட்பார ஓட்டல்களில் சோதனை

Print PDF

தினமலர் 06.05.2010

பிளாட்பார ஓட்டல்களில் சோதனை

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பிளாட்பார ஓட்டல்களில் நேற்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு, உணவுப் பொருட் களை தயார் செய்த 15 கடைகளில் சோதனை நடந்தது. 8 கடைகளில் இருந்து உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சோதனைக்கு அனுப்பப் பட்டன. மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் 12 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.