தினமலர் 12.05.2010
காலாவதியானபொருட்கள் பறிமுதல்
பண்ருட்டி : பண்ருட்டி பஸ் நிலையம் பகுதி கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.பண்ருட்டி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் கள் மணிகண்டன், சுதாகர், மேற் பார்வையாளர்கள் பாண்டியன், கொளஞ்சி உள்ளிட்டோர் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஸ்வீட் ஸ்டால், பேக்கரி, ஓட்டல்கள், பங்க் கடைகள் உள்ளிட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் காலாவதியான, பெயர் விலாசம், தயாரிப்பு நாட்கள் இல்லாத ஸ்வீட்கள், பேக்கரி பொருட்கள், பிஸ்கட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர