தினமலர் 12.05.2010
டிரம்மில் வைத்து விற்கப்பட்ட சமையல் எண்ணெய் பறிமுதல்
ராணிப்பேட்டை:வாலாஜாபேட்டையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாயத் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.தாசில்தார் கிருபானந்தம், நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம் மற்றும் ஊழியர்கள் நேற்று மாலை டிரங்க் ரோட்டில் துவங்கி மளிகைக் கடைகள், பழக்கடைகள், ஓட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் உள்ள தாயரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை பறிசோதனை செய்த அவர்கள் தரமற்ற காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர். டிரம்மில் வைத்து விற்கப்பட்ட சமையல் எண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பழக்கடைகளில் இருந்த அழுகிய பழங்கள், பழைய வாட்டர் பாக்கெட்டுகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த ரெய்டால் வாலாஜாபேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.