Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதி உணவு பொருட்கள் அழிப்பு

Print PDF

தினமலர்    14.05.2010

காலாவதி உணவு பொருட்கள் அழிப்பு

முசிறி: முசிறி அடுத்த தண்டலைப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் திருச்சி சுகாதாரத்துறை துணை இயக்குனர் வீரபாண்டியன் உத்திரவின் பேரில் முசிறி டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான உணவு பொருள்களை அழித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சத்தியவதி ஆலோசனையின் பேரில் தண்டலைப்புத்தூர் மருத்துவ அலுவலர் டாக்டர் சந்திரசேகர் தலைமையில் உணவு ஆய்வாளர் கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாந்தலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், விஜயகுமார், சிங்காரவேலு, சாந்தி, டவுன் பஞ்சாயத்து துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி, துப்புறவு மேற்பார்வையாளர் ரெங்கசாமி, சதாசிவம் ஆகியோர் அடங்கிய குழுவினர், மளிகைக்கடை மற்றும் குளிர்பானக்கடைகளில் காலாவதியான உணவுப்பொருள், குளிர்பானம், எண்ணெய் பொருள் ஆகியவை உள்ளதா என்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 1,200 ரூபாய் மதிப்புள்ள காலாவதியான உணவுப்பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள், பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டது.