Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தரமற்ற உணவு விற்ற ஓட்டல்கள் மூடல்

Print PDF

தினமலர்      14.05.2010

தரமற்ற உணவு விற்ற ஓட்டல்கள் மூடல்

தேனி : வீரபாண்டி திருவிழாவில் தரமற்ற உணவு, குடிநீர், போலி குளிர்பானம் விற்ற ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு தற்காலிக ஓட்டல்கள் மூடப்பட்டன.

தேனி மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு பரவியதை தொடர்ந்து வீரபாண்டியில் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் அதிகாரிகள் ஓட்டல்கள், குளிர்பானங்கள் விற்கும் கடைகளை சோதனையிட்டனர். இதில் தற்காலிகமாக அமைக்கப்படிருந்த ஓட்டல்களில் உணவு, குடிநீர் தரம் மோசமாக இருந் தது. இவற்றை பறிமுதல் செய்து ஓட்டலை மூட உத்தரவிடப்பட்டது. தற்போதுள்ள 250 துப்புரவு பணியாளர்களுக்கு துணையாக மேலும் 100 துப்புரவு பணியாளர்களை நியமித்து பணி மேற்கொள்ள உத்தரவிட்டார்.

ஆர்.டி..,சுப்பிரமணியன் தலைமையில், தாசில் தார், பேரூராட்சி உதவி இயக்குனர், கோயில் நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட சுகாதாரக்குழு அமைத்து, விழா முடியும் வரை வீரபாண்டியில் தங்கி துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார்.