தினமணி 14.05.2010
உசிலம்பட்டி உணவுக் கடைகளில் சோதனை
உசிலம்பட்டி, மே 13: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனிச்சாமி உத்தரவின் பேரில், தொட்டப்பநாயக்கனூர் வட்டார மருத்துவ அலுவலர் சபிதா தலைமையில், காவல் துறை சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் காலாவதியான உணவுப் பொருள்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் சுமார் 46 கடைகளில் சோதனை மேற்கொள்ளபட்டது. இதில் நகராட்சி உணவு ஆய்வாளர் சரவணபிரபு மற்றும் தொட்டப்பநாயக்கனூர் சுகாதார ஆய்வாளர்கள் அக்னி கணேசன், நாகராஜ், செல்வராஜ், ஜோதிவாசு, கருப்பசாமி ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக பான்பராக், குட்கா, தண்ணீர் பாக்கெட், பிஸ்கெட், புரூட் மிக்சர், ஜூஸ் தயாரிக்கப் பயன்படும் பவுடர் ஆகியன சோதனையிடப்பட்டன.