தினமணி 14.05.2010
சத்தியில் காலாவதி பொருள்கள் அழிப்பு
சத்தியமங்கலம்,மே 13: சத்தியமங்கலத்தில் காலாவதியான குடிநீர் பொருள்களை சுகாதார துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
சத்தியமங்கலம் நகராட்சியில் காலாவதியான பொருள்கள் விற்பனை குறித்து சோதனை நடத்துமாறு நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டதன் பேரில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செல்வம், துப்புரவு அலுவலர் கே.சக்திவேல், துப்புரவு ஆய்வாளர்கள் ஆர்.ராமமூர்த்தி, ஈஸ்வரன், சத்தி தனி வருவாய் ஆய்வாளர் ரஜித்குமார் ஆகியோர் வியாழக்கிழமை மளிகைக்கடை, தேநீர், பேக்கரி, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் ஆய்வு செய்தனர்.
தயாரிப்பு நாள் மற்றும் காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்கள் இல்லாத குடிநீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள், முறுக்கு, காரவகை மசாலா, மாவுப் பொருள்கள், பேரிட்சை மற்றும் சாயம் கலந்த இனிப்பு வகைகள், உணவு எண்ணெய் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர்.