Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பைகளை கொட்டிட அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி தர வேண்டும்: அரசுக்கு கோரிக்கை

Print PDF

தினமலர்       17.05.2010

குப்பைகளை கொட்டிட அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி தர வேண்டும்: அரசுக்கு கோரிக்கை

பெரியதாழை, மே 17- சாத்தான்குளம் டவுன் பஞ்., பகுதியில் குவியும் குப்பைகளை கொட்டிட அரசு புறம்போக்கு நில த்தை ஒதுக்கி தர வேண்டும் என டவுன் பஞ்.,நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.டவுன் பஞ்.,ல் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் குப்பைகளை தினசரி கண்டபடி தெருக்களில் கொட்டி வருகின்றனர். டவுன் பஞ்., குப்பைஅள்ளும் வாகனம் குப்பைகளை அள்ளி கொண்டு போகும் சிறிது நேரத்திலே பொதுமக்கள் மீண்டும் தெருக்களில் குப்பைகளை கொட்டுவதால் குப்பைகள் தினசரி குவிந்து கொண்டே போகிறது. இந்த குப்பைகளை கொட்டிட இடம் இல்லாமல் டவுன் பஞ்., நிர்வாகம் திணறிக் கொண்டு வருகிறது. மே லும் பொதுமக்கள் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டக் கூடாது. குப்பை வண்டி வரும்போது அதில் கொட்டி சுகாதாரத்தை பேணுதல் வேண்டும் என டவுன் பஞ்., தலைவர் தங்கத்தாய் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் குவியும் குப்பைகளை கொட்டிட அரசு புறம்போக்கு நிலத்தில் இடம் ஒதுக்கி தரக் கோரி அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதைப் போல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். 15 வார்டுகளிலும் வார்டு உறுப்பினர்கள் மூலமாக பொதுமக்களை திரட்டி பிளாஸ்டிக் பைக ளை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திடவும் டவுன் பஞ்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விழிப்புணர்வு கூட்டத்திற்கு பின்பும் பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டவுன் பஞ்., நிர்வாகம் எச்சரித்துள்ளது.