Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

Print PDF

தினமலர்     17.05.2010

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

போடி:போடியில் கலங்கலான குடிநீர் சப்ளை செய்வதையொட்டி பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருகுமாறு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

போடியில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக குரங்கனி மலைப்பகுதியிலிருந்து வரும் நீரை போடி பரமசிவன் கோயில் அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு சுத்திகரிக்கப் பட்டு நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக குடிநீர் ஆதாரத்தில் கலங் களான குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் பருகும் பொதுமக்களுக்கு பல் வேறு வகையில் தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குடிநீரை பொதுமக்கள் நன்கு காய்ச்சி குடிக்குமாறு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.