Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதி உணவுப் பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினமலர்     15.05.2010

காலாவதி உணவுப் பொருட்கள் பறிமுதல்

துறையூர்: தமிழ்நாடு நகராட்சி இயக்குனர், கலெக்டர் உத்தரவுப்படி துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அறிவுரையின் படி துறையூர் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளால் பஸ் நிலையம், அதைச் சுற்றியுள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் இருந்த உணவுப் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, பயன்படுத்தும் காலம், லேபிள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட தின்பண்டங்களின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். பின்னர் உணவுப் பண்டங்கள் பினாயில் கொண்டு அழித்து நகராட்சி உரக்கிடங்கில் புதைக்கப்பட்டன.

நகராட்சி துப்புரவு அலுவலர் குமார், சுகாதார ஆய்வாளர் குமார், மேற்பார்வையாளர்கள் பாலசுப்ரமணியன், சுப்ரமணியன், ராஜ்வேல் மற்றும் பணியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். காலாவதியான பொருட்களை விற்றாலும், வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகவலை நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ரவிச்சந்திரன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.