Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூரில் காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்     18.05.2010

கடையநல்லூரில் காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

கடையநல்லு£ர், மே 19: கடையநல்லு£ரில் கடைக ளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி காலாவதியான பொருட்ளை பறி முதல் செய்தனர்.

கடையநல்லு£ர் நக ராட்சி ஆணையாளர் அப்துல்லத்தீப், துப்புரவு அலுவலர் கணேசமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், பிச்சையா பாஸ்கர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் கடைகள் மற்றும் ஓட்டல் கள், பழக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் அழுகிய பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவை நகராட்சி உரக்கிடங்கில் தீயிட்டு அழிக்கப்பட்டன. கடையநல்லு£ரில் பழக்கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தினர்.