Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.19.25 லட்சம் ஒதுக்கீடு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை

Print PDF

தினகரன்      18.05.2010

ரூ.19.25 லட்சம் ஒதுக்கீடு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை

புதுடெல்லி, மே 19: டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசுவை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இப்போதே எடுக்க வேண்டும்என்று டெல்லி மாநகராட்சி கமிஷனர் கே.எஸ்.மேஹ்ரா கூறினார். மாநகராட்சி கமிஷனர் மெஹ்ரா நேற்று முன் தினம் இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறிருப்பதாவது:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக டெல்லி நகரை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.விளையாட்டு போட்டிகள் நடக்கும் சமயம் கொசுக்கள் அதிகம் உற்பதியாகும் வாய்ப்பு உள்ளது. கொசு உற்பத்தி அதிகமாகனால், டங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. போட்டிகள் நடக்கும்போது டெங்கு காய்ச்சல் பரவினால் நமது நாட்டின் கவுரவம் பாதிக்கும். எனவே டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசுக்களை ஒழிக்க வேண்டும்.

வீடுகள், தெருக்கள், சாலைகள் மற்றும் குடியிருப்புக்கள் அனைத்தையும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மற்றும் மாநில அரசின் அதிகாரிகள், சுயாட்சி அமைப்புக்கள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வர்த்தக வளாகங்கள், சந்தை அமைப்புக்கள் இப்போதே எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாநகராட்சியும் அரசும் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் மெஹ்ரா கூறியுள்ளார். டெல்லி மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு