Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதி உணவு பொருள்கள் எரிப்பு

Print PDF

தினமலர்    20.05.2010

காலாவதி உணவு பொருள்கள் எரிப்பு

திட்டக்குடி : திட்டக்குடி மளிகை கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவுப் பொருள் கள் அழிக்கப் பட்டது.தமிழகம் முழுவதும் காலாவதியான மற்றும் போலி மருந்து விற்பனையைத் தொடர்ந்து ஓட்டல் பண்டங்கள் முதல் மளிகை கடை வரை உள்ள அனைத்து வியாபார நிறுவனங்களிலும் காலாவதியான பொருள் கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு வருகிறது. திட்டக்குடி நகர் புறத்தில் கடந்த இரண்டு நாட்களாக காலாவதியான உணவு பொருள்கள் பறிமுதல் செய்யும் பணி தொடர்ந்தது.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பரமேஸ்வரி உத்தரவின் பேரில், வட்ட ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கனிமொழி முன்னிலையில் உணவு கலப்பட தடுப்பு பிரிவு ஆய்வாளர் பழனிவேல் மற்றும் துப்புரவு பணியாளர்கள் காலாவதியான உணவு பொருள்களை பறிமுதல் செய்து பேரூராட்சி குப்பை சேமிப்பு கிடங் கில் கொட்டி எரித்தனர்.