தினமலர் 20.05.2010
தரமான குளோரின் வாங்க அதிகாரிகளுக்கு அறிவுரை
கம்பம்:குடிநீரில் கலக்கும் குளோரின் தரமானதாக இருக்க வேண்டும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகாவில் வயிற்றுப் போக்கினால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரில் தரமான குளோரின் போதிய அளவு கலக்காதது வயிற்று போக்கிற்கு காரணம் என சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் பரிசோதனை மையம் அறிக்கை தந்துள்ளது. இதன் அடிப்படையில் தரமான குளோரின் கொள்முதல் செய்ய வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் முத்துவீரன் உத்தரவிட் டுள்ளார். தற்போது வாங்கும் குளோரினை அரசு பரிசோதனை மையத்திற்கு அனுப்பி அதன் மூலப்பொருள்களை ஆய்வு செய்யவும் குடிநீர் பம்பிங் ஸ்டேஷன்களில் அதிகாரிகள் மேற் பார்வையில், குளோரின் கலக்கப்பட வேண் டும் என்றும் உத்தரவிட்டார்.