தினமலர் 24.05.2010
கோலியனூரான் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் நக ராட்சி பொக்லைன் மூலம் கால்வாய் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.விழுப்புரத்தில் கால் வாய்களில் தேங்கும் குப் பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றி வந்தனர். கழிவுப் பணியில் ஆட் கள் இருப்பதை தவிர்க்க பொக்லைன் மூலம் கழிவுகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொக்லைனில் பயன்படுத்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வாங்கிய பிரத் யேக பக்கெட் மூலம் கால் வாய் கழிவுகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. முதற் கட்டமாக கோலியனூரான் வாய்க்காலில் கழிவுகள் அகற்றும் பணி நடக்கிறது.நேற்று கலெக்டர் அலுவலகம் பின் புறம் துவங்கி திருச்சி நெடுஞ்சாலை, ரங் கநாத ரோடு, கே.கே.ரோடு வரை செல்லும் கோலியனூரான் வாய்க் காலில் அடைபட்டிருந்த பிளாஸ் டிக் கழிவுகள், குப்பைகள் அகற்றி டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.