தினகரன் 24.05.2010
காய்ச்சிய நீரை பருக வேண்டும்
ராமநாதபுரம். மே 24: நன்கு காய்ச்சிய நீரை பருக வேண்டும் என ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமான் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் நகரில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் நகர் பகுதிகளில் மக்கள் தனியார் டேங்கர் லாரிகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ.3க்கு வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்.
தேனி மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு நோய் பரவி வருவதால் ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குளோரின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமான் கூறியதாவது: ராமநாதபுரம் நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நகர் பகுதிகளில் சிலர் தனியார் டேங்கர் லாரிகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை வாங்கி உபயோகிக்கின்றனர்.
தற்போது கோடைகாலம் என்பதால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் உஷ்ணம் தொடர் பான நோய்கள் பரவாமல் இருக்க காய்ச்சி, வடி கட்டிய குடிநீரை பொதுமக்கள் பருக வேண்டும். இதன் மூலம் தொற்றுநோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.