தினகரன் 24.05.2010
தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்
திருப்பூர், மே 24: திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஜெயலட்சுமி விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூர் மாநகரின் பயன்பாட்டில் உள்ள மூன்று குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரமான பவானி ஆறு மற்றும் காவேரி ஆற்றில் பருவமழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாநகரில் வழங்கப்படும் குடிநீரை காய்ச்சி உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், 23ம் தேதி (நேற்று) முதல் 31ம் தேதி வரை குடிநீர் வினியோகப்பிரிவில் தலைமை நிலைய வடிகட்டும் படுகை, நீருந்தும் நிலையங்கள், பிரதான குழாய்கள், மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றில் சுத்தம் செய்யும் பணிகள் நடக்க உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து, சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.