Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடுகளை சுற்றி சாக்கடை நீர் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு

Print PDF

தினகரன்    24.05.2010

வீடுகளை சுற்றி சாக்கடை நீர் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு

புதுச்சேரி, மே 24: புதுவை அடுத்துள்ள அபிஷேகப்பாக்கத்தில் வீடுகளை சுற்றி சாக்கடை கழிவு நீர் தேங்குவது குறித்தும், வடிகால் வசதி இல்லாத போத்தியம்மன் கோயில் தெரு, காமராஜர் வீதி உள்ளிட்ட பல தெருக்களில் சாக்கடை நீர் சூழ்ந்து தூர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது குறித்து தினகரனில் கடந்த 19ம் தேதி செய்தி வெளியானது.

இதையடுத்து பொது சுகாதாரத்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கந்தசாமி, உள்ளாட்சித்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு, காங்., மாநில செய்தி தொடர்பாளர் வீரராகவன், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனு அளித்திருந்தார்.

இது குறித்து பொதுசுகாதார அமைச்சர் நமச்சிவாயம் உள்ளாட்சித்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியனிடம் உரிய நடவடிக் கையை உடனே எடுக்க உத்தரவிட்டார். அபிஷேகப்பாக்கத்தில் சாக்கடை நீர் சூழ்ந்துள்ள பகுதியில் போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையருக்கு உள்ளாட்சி துறை இயக்குநர் உத்தரவிட்டார்.

Last Updated on Tuesday, 25 May 2010 04:17