Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கலப்பட விழிப்புணர்வு பிரசார இயக்கம்

Print PDF

தினகரன்     24.05.2010

கலப்பட விழிப்புணர்வு பிரசார இயக்கம்

திருவாரூர், மே 24: திருவாரூர் ரயில் நிலையத்தில் கலப்பட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு பிரசார இயக்கத்தை நகர £ட்சி தலைவர் தென்னன் துவக்கி வைத்தார்.

திருவாரூர் நகராட்சி மற்றும் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றிய பிரசார இயக்கம் திருவாரூர் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்டது. நகராட்சி தலைவர் தென்னன் துண்டு பிரசுரத்தை வெளியிட திருவாரூர் ஸ்டேசன் மாஸ்டர் தர்மன் பெற்றுக்கொண்டார். நகரா ட்சி ஆணையர் சரவணன், நகராட்சி துணை தலைவர் சங்கர், நுகர்வோர் அமைப்பு தலைவர் பிறை அறிவழகன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ரயில் நிலையத்திலிருந்த பயணிகளுக்கு துண்டு பிரசு ரம் விநியோகிக்கப்பட்டது. பாலில் சுகாதாரமற்ற தண் ணீரை கலப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும். உணவு எண்ணெயில் விளக்கெண் ணெய், ஆமணக்கு எண் ணெய், ஆர்ஜிமோன் எண் ணெய் மற்றும் இதர மாற்று எண்ணெய்களை கலப்பதன் மூலம் கண் குருடாதல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படும் என்பன உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவு பொருட் களை குறிப்பிட்டு அதில் கல க்கப்படும் கலப்படங்களால் ஏற்படும் தீமைகள் பற்றி அச்சிடப்பட்டிருந்தது.

Last Updated on Tuesday, 25 May 2010 04:17