தினகரன் 25.05.2010
காலாவதி உணவு பொருட்கள் உள்ளதா? ரேஷன் கடைகளில் திடீர் சோதனை
சென்னை, மே 25: ரேஷன் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் உள்ளதா என்று அதிகாரிகள் தமிழகம் முழுக்க தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக சுகாதாரத் துறை, உணவு வழங்கல் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒரு மாதமாக கடைகளில் சோதனை நடத்தி காலாவதி மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.
‘காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு இல்லை என்று போர்டு வைக்க வேண்டும்’ என்று கடைகாரர்களுக்கு சுகாதாரத் துறை எச்சரித்தது.
இந்நிலையில், ரேஷன் கடைகளிலும் அரிசி, மைதா, ரவை, கோதுமை மற்றும் சமையல் எண்ணெய், மிளகாய், தனியா, மிளகு, சீரகம், புளி போன்ற மளிகைப் பொருட்கள் விற்காமல் பல நாட்கள் தேங்கும் நிலை உள்ளது. அதனால் ரேஷன் கடைகளிலும் சோதனை செய்து காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரி கூறியதாவது:
ரேஷன் கடைகளிலும் ஆட்டா மற்றும் மளிகை பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்த பொருட்கள் விரைவில் கெட்டுப் போக கூடியவை. தமிழகத்தில் உள்ள 29,140 கூட்டுறவு அங்காடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் 1273 அமுதம் பல்பொருள் அங்காடி, சுயஉதவிக் குழுக்கள் மற்ற நிறுவனங்கள் நடத்தும் 766 கடை என 31,179 ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்கள் உள்ளனவா என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் உள்பட தென் மாவட்டங்களில் உள்ள சில கடைகளில் காலாவதியான பொருட்கள் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் ராயபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையின் போது கடையில் காலாவதியான உணவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரி தெரிவித்தார். தமிழகம் முழுக்க அதிரடி