Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி தீவிரம்

Print PDF

தினகரன்          25.05.2010

விழுப்புரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி தீவிரம்

விழுப்புரம், மே 25: விழுப்புரம் நகராட்சியில் உள்ள 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் சுத்தம் பணி தீவி ரமாக நடந்து வருகிறது.

காலரா போன்ற தொற்று நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களை சுத்தம் செய்ய தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது. அதன்படி விழுப்புரத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், குடிநீர் குழாய் கள் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

விழுப்புரம் மருதூர், கே.கே.ரோடு, காமராஜர் வீதி, திருவிக வீதி, பூந்தோட்டம், வடக்கு தெரு, எம்ஜி ரோடு, பெரியகாலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு விழுப்புரம் நகராட்சி பயணியர் விடுதி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. 9 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும் பணி கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோன்று வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

சண்முகபுரம் காலனி, மகாராஜபுரம், மின்வாரிய குடியிருப்பு, கீழ்ப்பெரும்பாக்கம், பொன்முடி நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பீமநாயக்கன் தோப்பு போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வரும் 7 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ளது) சுத்தம் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. மேலும் இப்பகுதிகளுக்கு உட்பட்ட வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாயும் சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இப்பணிகளை நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், ஆணையாளர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், ஓவர்சியர் ஜெயபிரகாஷ்நாராயணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்