தினகரன் 25.05.2010
கார்பைட் கல் வைத்த 2 டன் மாம்பழம் பறிமுதல்
தர்மபுரி, மே 25: தர்மபுரி பகுதியில் கார்பைட் கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதன்பேரில், சுகாதாரத்துறை ஆலோசனையின்படி ஆணையர் அண்ணா துரை தலை மையில் நகராட்சி ஊழியர்கள் மாம்பழக் கடைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து, அப்புறப்படுத்தினர்.