Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டீ கடைகளில் திடீர் ஆய்வு

Print PDF

தினகரன்   25.05.2010

டீ கடைகளில் திடீர் ஆய்வு 

ஓசூர், மே 25: ஓசூர் நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், உணவு ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று டீ கடைகள் மற்றும் டீ து£ள் விற்பனை செய்யும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின்பேரில் பறிமுதல் செய்யப்பட்ட டீ தூள்களை சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உணவு ஆய்வாளர் தங்கராஜ் கூறியதாவது: டீ கடைகளில் கலப்பட டீ து£ள் உபயோகப்படுத்தப்படுவதாக வந்த புகாரின்பேரில், ஆய்வு நடத்தினோம். சோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை கிடைத்ததும் கலப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும், கலப்பட து£ள் உபயோகம் செய்தவர்கள் மீதும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு தங்கராஜ் கூறினார்.