Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சத்தியில் காலாவதி பொருட்கள் அழிப்பு

Print PDF

தினமலர்      26.05.2010

சத்தியில் காலாவதி பொருட்கள் அழிப்பு

சத்தியமங்கலம்: சத்தி நகராட்சி பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பேக்கரிகளில் காலாவதியான பொருட்களை கண்டுபிடித்து நகராட்சி அதிகாரிகள் அழித்தனர். சத்தி நகராட்சி 27 வார்டுகளில் உள்ள டீக்கடை, பேக்கரி மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நகராட்சி கமிஷனர் கணேசன், நகர்நல அலுவலர் செல்வம், சுகாதார அதிகாரி சக்திவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர். காலாவதியான பிஸ்கட், ரொட்டி, குளிர்பானம், பேரிட்சை பழம், மாவு பொருட்கள் உள்ளிட்டவைபறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.